ETV Bharat / state

சாத்தூர் அருகே கடைசி வெள்ளி திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Feb 7, 2020, 5:19 PM IST

விருதுநகர்: பிரசித்திப்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தை மாத கடைசி வெள்ளி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

virudhunagar
virudhunagar

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலானது 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். அர்சுனா நதி, வைப்பாறு இணையுமிடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி, தை, மார்கழி மாதங்கள் விசேஷ மாதங்களாக கெண்டாடப்படும். அதன்படி, தை மாத கடைசி வெள்ளியான இன்றைய நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்களும் நடைபெற்றன.

கடைசி வெள்ளி திருவிழா

ஆயிரக்கணக்காண பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொங்கல், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும், இந்த திருவிழாவிற்காக விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ விழா கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலானது 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். அர்சுனா நதி, வைப்பாறு இணையுமிடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி, தை, மார்கழி மாதங்கள் விசேஷ மாதங்களாக கெண்டாடப்படும். அதன்படி, தை மாத கடைசி வெள்ளியான இன்றைய நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்களும் நடைபெற்றன.

கடைசி வெள்ளி திருவிழா

ஆயிரக்கணக்காண பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொங்கல், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும், இந்த திருவிழாவிற்காக விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ விழா கொண்டாட்டம்

Intro:விருதுநகர்
07-02-2020

இருக்கன்குடியில் தைகடைசி வெள்ளி திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tn_vnr_02_irukankudi_temple_function_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன்கோயில் உள்ள இக்கோயில் அர்சுனாநதி மற்றும் வைப்பாறு இணையும் இடத்தில் அமைந்துள்ளது. தமிழகத்திலே பிரசித்திபெற்ற இந்த மாரியம்மன் கோயிலில் தமிழ்மாதங்களான ஆடி, தை, மார்கழி உள்ளிட்ட மாதங்களில் விஷேச மாதங்களாக கெண்டாடப்படும்.
இதில் தை மாத கடைசி வெள்ளி திருவிழா வெகுவிமர்சையாக வெள்ளகிழமை நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்ளும் நடைபெற்றன. இத்திருவிழாவிற்காக விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரகணக்காண பக்தர்கள் வந்து இத்திருவிழாவில் கலந்து கொண்டு மாரியம்மனுக்கு அக்னிசட்டி ஆயிரம் கண் பானை எடுத்து, பொங்கல் வைத்து, மொட்டை எடுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி, நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர். இத்திருவிழாவிற்காக விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டிருந்தன. பல்வேறு பகுதியிலிருந்து மாரியம்மனை தரிசனம் செய்தவர்காக பக்தர்கள் பாதையாத்திரையாக கடந்த இரண்டு நாட்களாக வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 500க்கு மேற்பட்ட போலீசார் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.