ETV Bharat / state

இரு சக்கர வாகனம் மீது ஆட்டோமோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு

author img

By

Published : Nov 5, 2020, 8:07 AM IST

சிவகாசியில், இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்; ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

road-accident
road-accident

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரிக்கண்ணு (55). இவர், பாதுகாப்புப் பணிக்காக, தனது இரு சக்கர வாகனத்தில் சாட்சியாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மாரிக்கண்ணுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமைக் காவலரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, சிவகாசி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மோகன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரிக்கண்ணு (55). இவர், பாதுகாப்புப் பணிக்காக, தனது இரு சக்கர வாகனத்தில் சாட்சியாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மாரிக்கண்ணுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமைக் காவலரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, சிவகாசி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மோகன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.