ETV Bharat / state

கஞ்சா வைத்திருப்பதாகப் பொய் வழக்கு - போலீஸ் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு! - - காவல்துறையினர் மீது பொதுமக்கள் புகார்

விருதுநகர்: கஞ்சா வைத்திருப்பதாகக் கூறி இளைஞர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, அவரை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியிருப்பதாக ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புகார் அளித்துள்ளனர்.

fake-case-so-petition
fake-case-so-petition
author img

By

Published : Dec 8, 2019, 9:22 AM IST

விருதுநகர் அருகே உள்ள சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த முனியசாமி (26). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சூலக்கரை காவல் துறையினர் கடந்த 29ஆம் தேதி இவரை கைதுசெய்தனர். மேலும், இவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட முனியசாமியை காவல் துறையினர் கண்மூடித் தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், முனியசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டதாகக் கூறி சின்னதாதம்பட்டி, பெரியதாதம்பட்டி, சூலக்கரை, மீசலூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கஞ்சா வைத்திருப்பதாகப் பொய் வழக்கு

இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது விசாரணை நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இதுகுறித்து முனியசாமியின் தாய் கூறுகையில், ‘முனிசயாமிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கும் முன்பகை இருந்து வந்தது. அதன் காரணமாகவே முனியசாமி மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

திரிவிக்ரம ஆசனத்தில் அம்பு எய்தி உலக சாதனை!

விருதுநகர் அருகே உள்ள சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த முனியசாமி (26). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சூலக்கரை காவல் துறையினர் கடந்த 29ஆம் தேதி இவரை கைதுசெய்தனர். மேலும், இவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட முனியசாமியை காவல் துறையினர் கண்மூடித் தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், முனியசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டதாகக் கூறி சின்னதாதம்பட்டி, பெரியதாதம்பட்டி, சூலக்கரை, மீசலூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கஞ்சா வைத்திருப்பதாகப் பொய் வழக்கு

இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது விசாரணை நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இதுகுறித்து முனியசாமியின் தாய் கூறுகையில், ‘முனிசயாமிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கும் முன்பகை இருந்து வந்தது. அதன் காரணமாகவே முனியசாமி மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

திரிவிக்ரம ஆசனத்தில் அம்பு எய்தி உலக சாதனை!

Intro:விருதுநகர்
07-12-19

கஞ்சா வைத்து இருப்பதாக கூறி பொய் வழக்கில் போலீஸார் கைதுசெய்து தாக்கியாக கூறி 7 கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்

Tn_vnr_03_fake_case_sp_petition_vis_script_7204885Body:விருதுநகரில் கஞ்சா வைத்து இருப்பதாக கூறி பொய் வழக்கில் போலீஸார் கைதுசெய்து தாக்கியதை கண்டித்து 7 கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

விருதுநகர் அருகே உள்ள சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த முனியசாமி (26). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சூலக்கரை போலீஸார் கடந்த 29ம் தேதி கைதுசெய்தனர். மேலும், இவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட முனியசாமியை போலீஸார் கண்மூடித் தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது பாதம், கால்கள் மற்றும் கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த முனியசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டதாகக் கூறி சின்னதாதம்பட்டி, பெரியதாதம்பட்டி, சூலக்கரை, மீசலூர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதையடுத்து, போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர் இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாளை சந்தித்து, முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும், அவரை கண்மூடித்தனமாகத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் மனு அளித்தனர். அதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது விசாரணை நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இது குறித்து முனியசாமியின் அம்மா கூறும்போது, முனிசயாமிக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. முனியசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே முனியசாமி மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தது மட்டுமின்றி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

பேட்டி:

மாரியம்மாள் (பாதிக்கப்பட்டவரின் தாய்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.