ETV Bharat / state

விருதுநகரில் இன்று ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Aug 8, 2020, 8:38 PM IST

விருதுநகரில் இன்று ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா உறுதி
விருதுநகரில் ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இம்மாவட்டத்தில் ஏற்கனவே 9 ஆயிரத்து 527 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 246 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 773ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை 7 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூல உயிரிழப்பு எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள சிறப்பு வார்டில் ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இம்மாவட்டத்தில் ஏற்கனவே 9 ஆயிரத்து 527 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 246 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 773ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை 7 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூல உயிரிழப்பு எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள சிறப்பு வார்டில் ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.