ETV Bharat / state

விருதுநகர்: மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று!

author img

By

Published : Jul 22, 2020, 5:21 AM IST

விருதுநகர்: மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட இன்று ஒரே நாளில் 360 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,924 ஆக அதிகரித்துள்ளது.

Corona approaching four thousand in the virudhunagar!
Corona approaching four thousand in the virudhunagar!

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 21) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட மேலும் 360 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,924 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2,186 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றினால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 21) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட மேலும் 360 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,924 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2,186 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றினால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.