விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 886 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று மேலும் 86 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இதுவரை 438 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 528 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இத்தொற்றின் காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.