ETV Bharat / state

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Mar 21, 2021, 9:59 PM IST

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான்
சீமான்

விருதுநகர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்றிரவு(மார்ச்.20) விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேலாக, பொதுக்கூட்டம் நடத்தியதாக அப்பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், வேட்பாளர்கள் செல்வக்குமார்(விருதுநகர்), பிரியா(சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி(சாத்தூர்), அபிநயா(ஸ்ரீவில்லிப்புத்தூர்), உமா (அருப்புக்கோட்டை) உள்ளிட்ட 450 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுங்கசாவடிகள் உடைக்கப்படும்’ - சீமான்

விருதுநகர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்றிரவு(மார்ச்.20) விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேலாக, பொதுக்கூட்டம் நடத்தியதாக அப்பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், வேட்பாளர்கள் செல்வக்குமார்(விருதுநகர்), பிரியா(சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி(சாத்தூர்), அபிநயா(ஸ்ரீவில்லிப்புத்தூர்), உமா (அருப்புக்கோட்டை) உள்ளிட்ட 450 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுங்கசாவடிகள் உடைக்கப்படும்’ - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.