ETV Bharat / state

நாயை கொலை செய்து தூக்கிச் செல்லும் இளைஞர்கள்.. விழுப்புரத்தில் நடப்பது என்ன? - dog video

Youth killed a Dog: வளவனூர் பகுதியில் இரவு நேரத்தில் வந்த இளைஞர்கள் நாயை அடித்துக் கொலை செய்து தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth killed a Dog
நாயை அடித்துக் கொலை செய்து தூக்கிச் சென்ற இளைஞர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 8:44 AM IST

நாயை அடித்துக் கொலை செய்து தூக்கிச் சென்ற இளைஞர்கள்

விழுப்புரம்: வளவனூர் பேரூராட்சி பஞ்சாயத்து போர்டு தெருவைச் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு ஒரு சிலர் உணவுகள் அளித்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தெருவில் உள்ள நாய்கள் ஒவ்வொன்றாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதனால் சந்தேகமடைந்த நாய்களின் உரிமையாளர்கள், பஞ்சாயத்து போர்டு தெருவிலுள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமராவின் பதிவில் இரவு நேரங்களில் தெருவில் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சில இளைஞர்கள் வந்து நாய்களை அடித்துக் கொன்று தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்துள்ளது.

இதனையடுத்து, நாய்களை அடித்துக் கொன்று எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால், நாய்களை வெளியில் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். இதுவரை அந்தப் பகுதியில் 6 நாய்களுக்கு மேல் காணாமல் போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர்களை உடனடியாக கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 150 ஏக்கர் நெற்பயிர்களை சுருட்டிச் சென்ற வெள்ளம்...நிர்கதியாக நிற்கும் நெல்லை விவசாயிகள்!

நாயை அடித்துக் கொலை செய்து தூக்கிச் சென்ற இளைஞர்கள்

விழுப்புரம்: வளவனூர் பேரூராட்சி பஞ்சாயத்து போர்டு தெருவைச் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு ஒரு சிலர் உணவுகள் அளித்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தெருவில் உள்ள நாய்கள் ஒவ்வொன்றாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதனால் சந்தேகமடைந்த நாய்களின் உரிமையாளர்கள், பஞ்சாயத்து போர்டு தெருவிலுள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமராவின் பதிவில் இரவு நேரங்களில் தெருவில் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சில இளைஞர்கள் வந்து நாய்களை அடித்துக் கொன்று தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்துள்ளது.

இதனையடுத்து, நாய்களை அடித்துக் கொன்று எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால், நாய்களை வெளியில் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். இதுவரை அந்தப் பகுதியில் 6 நாய்களுக்கு மேல் காணாமல் போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர்களை உடனடியாக கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 150 ஏக்கர் நெற்பயிர்களை சுருட்டிச் சென்ற வெள்ளம்...நிர்கதியாக நிற்கும் நெல்லை விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.