ETV Bharat / state

கி.பி.15ஆம் நூற்றாண்டிலிருந்து காலம் காலமாக வழிபட்டு வந்த வேடியப்பன் சிற்பம்... கள ஆய்வில் வெளிவந்த உண்மை...

author img

By

Published : Oct 25, 2022, 7:05 AM IST

விழுப்புரத்தில் காலம் காலமாக வழிபட்டு வந்த வேடியப்பன் சிற்பம் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

காலம் காலமாக வழிபட்டு வந்த வேடியப்பன் சிற்பம்.. கள ஆய்வில் வெளிவந்த உண்மை
காலம் காலமாக வழிபட்டு வந்த வேடியப்பன் சிற்பம்.. கள ஆய்வில் வெளிவந்த உண்மை

விழுப்புரம் மாவட்ட எல்லையான கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராம எல்லையான விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மழவந்தாங்கல் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த காட்டுக்குள்ளே இருக்கும் மூன்று மலைகளை ஒட்டிய அடிவாரத்தின் அருகாமையில், தனித்த ஒரு பெரிய பாறையின் நடுவில் வேடியப்பன் சிற்பம் அமைந்துள்ளது.

இந்த பகுதியை சுற்றி மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு மற்றும் வேட்டவலம் உள்ளிட்ட கிராம மக்களில் சிலர் காலம் காலமாக மண் குதிரைகள் வைத்து, அவ்வப்போது வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேடியப்பன் சிற்பம் அமைந்திருக்கும் இடத்தை, விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்தார்
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்தார்

செங்குட்டுவன் மேற்கண்ட கள ஆய்வில், இங்குள்ள வேடியப்பன் சிற்பம் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், “மழவந்தாங்கல் வனப்பகுதியில் தனித்த பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பம் சுமார் 6 அடி உயரம் 4 அடி அகலம் கொண்டதாக உள்ளது. முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சி தருகிறார். அவரது இரண்டு கரங்களில் வில் மற்றும் அம்பு இடம் பெற்றுள்ளன. சிற்பத்தின் பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று காட்டப்பட்டுள்ளது.

மக்களின் வழிபாட்டில்  வேடியப்பன் சிற்பம்
மக்களின் வழிபாட்டில் வேடியப்பன் சிற்பம்

அது வேடியப்பனின் வாகனமான குதிரை என்று அப்பகுதி உள்ளூர் வாசிகளால் கூறப்படுகிறது. வேடியப்பன் கால்களுக்கு கீழே இரண்டு சிறிய நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூரைச் சேர்ந்த வெங்கடேசன் உறுதிபடுத்தி இருக்கிறார். இங்கு தற்போது அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள்” என தெரிவித்தார். இந்த கள ஆய்வின்போது வேடியப்பன் கோயில் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் கவிஞர் அதியமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை - வேலூரில் குவிந்த மக்கள்

விழுப்புரம் மாவட்ட எல்லையான கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராம எல்லையான விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் மழவந்தாங்கல் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த காட்டுக்குள்ளே இருக்கும் மூன்று மலைகளை ஒட்டிய அடிவாரத்தின் அருகாமையில், தனித்த ஒரு பெரிய பாறையின் நடுவில் வேடியப்பன் சிற்பம் அமைந்துள்ளது.

இந்த பகுதியை சுற்றி மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு மற்றும் வேட்டவலம் உள்ளிட்ட கிராம மக்களில் சிலர் காலம் காலமாக மண் குதிரைகள் வைத்து, அவ்வப்போது வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேடியப்பன் சிற்பம் அமைந்திருக்கும் இடத்தை, விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்தார்
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வு செய்தார்

செங்குட்டுவன் மேற்கண்ட கள ஆய்வில், இங்குள்ள வேடியப்பன் சிற்பம் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், “மழவந்தாங்கல் வனப்பகுதியில் தனித்த பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பம் சுமார் 6 அடி உயரம் 4 அடி அகலம் கொண்டதாக உள்ளது. முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சி தருகிறார். அவரது இரண்டு கரங்களில் வில் மற்றும் அம்பு இடம் பெற்றுள்ளன. சிற்பத்தின் பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று காட்டப்பட்டுள்ளது.

மக்களின் வழிபாட்டில்  வேடியப்பன் சிற்பம்
மக்களின் வழிபாட்டில் வேடியப்பன் சிற்பம்

அது வேடியப்பனின் வாகனமான குதிரை என்று அப்பகுதி உள்ளூர் வாசிகளால் கூறப்படுகிறது. வேடியப்பன் கால்களுக்கு கீழே இரண்டு சிறிய நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூரைச் சேர்ந்த வெங்கடேசன் உறுதிபடுத்தி இருக்கிறார். இங்கு தற்போது அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள்” என தெரிவித்தார். இந்த கள ஆய்வின்போது வேடியப்பன் கோயில் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் கவிஞர் அதியமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை - வேலூரில் குவிந்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.