ETV Bharat / state

காவலர் உடல் தகுதி தேர்வுகள் எப்போது? - விழுப்புரம் எஸ்பி தகவல்

author img

By

Published : Nov 13, 2019, 8:40 AM IST

விழுப்புரம்: அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த காவலர் உடல் தகுதி தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

tamilnadu-police-physical-exam-date-re announced

காவலர் உடல் தகுதி திறன் தேர்வுகள் மீண்டும் நவம்பர் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 6ஆம் தேதி முதற்கட்ட காவலர் உடல்தகுதி தேர்வு காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுவந்தது.

அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நவம்பர் 9 முதல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட உடல் தகுதி தேர்வுகள் முறையே நவம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும்.

முதற்கட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் முறையை நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலுக்கு 04146 - 220161 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சரக்கு கப்பலில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

காவலர் உடல் தகுதி திறன் தேர்வுகள் மீண்டும் நவம்பர் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 6ஆம் தேதி முதற்கட்ட காவலர் உடல்தகுதி தேர்வு காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுவந்தது.

அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நவம்பர் 9 முதல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட உடல் தகுதி தேர்வுகள் முறையே நவம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும்.

முதற்கட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் முறையை நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலுக்கு 04146 - 220161 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சரக்கு கப்பலில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

Intro:விழுப்புரம்: காவலர் உடல்தகுதி திறன் தேர்வுகள் மீண்டும் நவம்பர் 18 தேதி முதல் நடைபெறுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.Body:இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,

"விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 6ம் தேதி முதற்கட்ட காவலர் உடல்தகுதி தேர்வு காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நவம்பர் 9,11,12,13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்ட உடல்தகுதி தேர்வுகள், முறையே நவம்பர் 18,19,20,21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மேலும் முதற்கட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 14, 15ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் முறையை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:மேலும் இதுதொடர்பான தகவலுக்கு 04146 - 220161தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.