ETV Bharat / state

குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர்: பொதுமக்கள் எதிர்ப்பு!

விழுப்புரம்: செஞ்சி அருகே குடியிருப்புப் பகுதியில் அமையவுள்ள தனியார் செல்போன் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Feb 9, 2021, 6:32 PM IST

பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், குடியிருப்பு பகுதி மக்களின் மீது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அப்பகுதிமக்கள் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அப்புகார் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த செஞ்சி மேல்மலையனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த செஞ்சி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவர் அமைப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறித்த சிறுவன் - பொதுமக்கள் அடி, உதை

கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், குடியிருப்பு பகுதி மக்களின் மீது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அப்பகுதிமக்கள் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அப்புகார் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த செஞ்சி மேல்மலையனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த செஞ்சி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவர் அமைப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறித்த சிறுவன் - பொதுமக்கள் அடி, உதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.