ETV Bharat / state

லாரி - டாடா ஏசி நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 13, 2019, 4:35 PM IST

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே டாடா ஏசி - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

accident

திருக்கோவிலூர் அருகே உள்ள லா.கூடலூர் ஊராட்சி பகுதியிலிருந்து 14 பேர் டாடா ஏசி சரக்கு வாகனத்தில் ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கடம்பூர் பகுதியில் உள்ள வளைவுச் சாலையில் எதிரே எரிவாயு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டாடா ஏசி வாகனத்தில் இருந்த மகாலட்சுமி, பொன்மலை செல்வன், தமிழரசன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்களை அங்கிருந்த மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேருக்குநேர் மோதிக்கொண்ட லாரி - டாடா ஏசி

காயமடைந்தவர்களில் 5 பேரை மட்டும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்து டாடா ஏசி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திருக்கோவிலூர் அருகே உள்ள லா.கூடலூர் ஊராட்சி பகுதியிலிருந்து 14 பேர் டாடா ஏசி சரக்கு வாகனத்தில் ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கடம்பூர் பகுதியில் உள்ள வளைவுச் சாலையில் எதிரே எரிவாயு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டாடா ஏசி வாகனத்தில் இருந்த மகாலட்சுமி, பொன்மலை செல்வன், தமிழரசன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்களை அங்கிருந்த மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேருக்குநேர் மோதிக்கொண்ட லாரி - டாடா ஏசி

காயமடைந்தவர்களில் 5 பேரை மட்டும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்து டாடா ஏசி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Intro:tn_vpm_01_thirukovilur_accident_3_death_vis_tn10026.mp4Body:tn_vpm_01_thirukovilur_accident_3_death_vis_tn10026.mp4Conclusion:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கடம்பூர் பகுதியில் டாடா ஏசி வாகனம் எரிவாயு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், டாடா எசி வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு. 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து திருக்கோவிலூர் மருத்துவ மனையில் அனுமதி !!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகுதி லா.கூடலூர். இந்த பகுதியில் இருந்து 14 பேருடன் டாடா ஏசி சரக்கு வாகனம் ஒன்று ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது கடம்பூர் பகுதியில் உள்ள வளைவு சாலைக்கு வரும் போது, எதிரே எரிவாயு ஏற்றி வந்த லாரியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டாடா எசி வாகனத்தில் சென்ற, மகாலட்சுமி, பொன்மலை செல்வன், தமிழரசன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டவர்களை அங்கிருந்து மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்டவர்களை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.