விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கோட்டக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் அறிவு விநாயகம் தலைமையிலான காவல் துறையினர் இன்று அதிகாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த டூரிஸ்ட் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், எந்தவித முன்அனுமதியும் இன்றி புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 40 பெட்டிகளில் 1920 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர் அவற்றை பறிமுதல்செய்து, கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி அம்மன் காலனி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்!