ETV Bharat / state

விடைபெற்ற சீசர்; மோப்ப நாய் சீசருக்கு ஓய்வு..யாழினி நாய்க்கு வரவேற்பு! - sniffer dog Caesar retired

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய மோப்ப நாய் சீசர் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், மோப்ப நாய் யாழினி பாதுகாப்பு பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற சீசர் மற்றும் பணியில் இணைந்த யாழினி
ஓய்வு பெற்ற சீசர் மற்றும் பணியில் இணைந்த யாழினி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சீசர் மோப்ப நாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறது. இதனால், சீசருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதியதாக பாதுகாப்பு பிரிவில் மோப்ப நாய் யாழினி சேர்க்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் பணி: சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 8 வருடம் 6 மாதங்களாக லாப்ரடர் (Labrador ) என்கிற வகையை சேர்ந்த சீசர் என்கிற மோப்ப நாயை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

சீசர் மோப்ப நாய்: சீசர் மோப்ப நாய் கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, ஒரு வருடங்கள் காசியாபாத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நாய்கள் வளர்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு சேர்க்கப்பட்டு, விமான நிலையத்தில் துல்லியமாக வெடி பொருட்களை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளது.

மோப்ப நாய் சீசருக்கு விடைபெறும் நிகழ்ச்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

போய் வாடா சீசர்: இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வந்த சீசர் மோப்ப நாயின் வெற்றி பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் சீசர் மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.

சீசருக்கு மரியாதை: மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான போக்குவரத்து பாதுகாப்பு குழு மற்றும் செனனி விமான நிலையம் இணைந்து நடத்திய இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங், சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற சீசருக்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து,சீசருக்கு கேக் வெட்டி, சிவப்பு கம்பளம் விரித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனத்தில் ஏற்றி, வாகனத்தை கயிறு கட்டி இழுத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தேசிய தடகள போட்டியில் 6 தங்கப்பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்.. ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மோப்ப நாய் யாழினிக்கு வரவேற்பு: அதனைத்தொடர்ந்து, 8 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வு பெறும் சீசர் மோப்ப நாய்ய்க்கு பதிலாக யாழினி எனப்படும் மோப்பநாய் இன்று முதல் சென்னை விமான நிலைய பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மோப்ப நாய் யாழினியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

யாழினி மோப்ப நாய் பிரிட்டிஷ் நாட்டு வகை சார்ந்த லாப்ரடர் ரெட்ரீவர்(Labrador Retrieve) நாய் ஆகும். ஒன்பது மாதம் வயதான யாழினி மோப்ப நாய்க்கு ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் கடந்த ஆறு மாத காலம், வெடி பொருட்கள் கண்டறிதல், போதை பொருட்கள் கண்டறிதல், தீவிர வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் சோதனை செய்வதற்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று யாழினி மோப்ப நாய் சென்னை சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதன் பணியை அது தொடங்கும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 9 மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் பேசியதாவது, “சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி வந்த மோப்ப நாய் சீசர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறது. இதனால், சீசருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சீசர் நாய் ஓய்வு பெறுவதையொட்டி யாழினி என்கிற புதிய மோப்ப நாய் விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த யாழினி மோப்பநாய் பயிற்சியின் போது சிறப்பாக பணியாற்றியது. யாழினி மோப்ப நாய் சீசர் மோப்ப நாயை போன்று சிறப்பாக பணியாற்றும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சீசர் மோப்ப நாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறது. இதனால், சீசருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதியதாக பாதுகாப்பு பிரிவில் மோப்ப நாய் யாழினி சேர்க்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் பணி: சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 8 வருடம் 6 மாதங்களாக லாப்ரடர் (Labrador ) என்கிற வகையை சேர்ந்த சீசர் என்கிற மோப்ப நாயை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

சீசர் மோப்ப நாய்: சீசர் மோப்ப நாய் கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, ஒரு வருடங்கள் காசியாபாத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நாய்கள் வளர்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு சேர்க்கப்பட்டு, விமான நிலையத்தில் துல்லியமாக வெடி பொருட்களை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளது.

மோப்ப நாய் சீசருக்கு விடைபெறும் நிகழ்ச்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

போய் வாடா சீசர்: இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வந்த சீசர் மோப்ப நாயின் வெற்றி பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் சீசர் மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.

சீசருக்கு மரியாதை: மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான போக்குவரத்து பாதுகாப்பு குழு மற்றும் செனனி விமான நிலையம் இணைந்து நடத்திய இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங், சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற சீசருக்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து,சீசருக்கு கேக் வெட்டி, சிவப்பு கம்பளம் விரித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனத்தில் ஏற்றி, வாகனத்தை கயிறு கட்டி இழுத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தேசிய தடகள போட்டியில் 6 தங்கப்பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்.. ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மோப்ப நாய் யாழினிக்கு வரவேற்பு: அதனைத்தொடர்ந்து, 8 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வு பெறும் சீசர் மோப்ப நாய்ய்க்கு பதிலாக யாழினி எனப்படும் மோப்பநாய் இன்று முதல் சென்னை விமான நிலைய பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மோப்ப நாய் யாழினியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

யாழினி மோப்ப நாய் பிரிட்டிஷ் நாட்டு வகை சார்ந்த லாப்ரடர் ரெட்ரீவர்(Labrador Retrieve) நாய் ஆகும். ஒன்பது மாதம் வயதான யாழினி மோப்ப நாய்க்கு ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் கடந்த ஆறு மாத காலம், வெடி பொருட்கள் கண்டறிதல், போதை பொருட்கள் கண்டறிதல், தீவிர வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் சோதனை செய்வதற்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று யாழினி மோப்ப நாய் சென்னை சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதன் பணியை அது தொடங்கும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 9 மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் பேசியதாவது, “சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி வந்த மோப்ப நாய் சீசர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறது. இதனால், சீசருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சீசர் நாய் ஓய்வு பெறுவதையொட்டி யாழினி என்கிற புதிய மோப்ப நாய் விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த யாழினி மோப்பநாய் பயிற்சியின் போது சிறப்பாக பணியாற்றியது. யாழினி மோப்ப நாய் சீசர் மோப்ப நாயை போன்று சிறப்பாக பணியாற்றும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.