ETV Bharat / state

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி..சென்னையில் மீண்டும் சோகம் - chennai Stormwater Drain death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை அசோக் பில்லர் பகுதியில் சாலையில் தோண்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பள்ளத்தில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் வடிகால் பள்ளம்
மழைநீர் வடிகால் பள்ளம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், மழை நீர் வடிகால் பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வருகின்றன. 10 அடிக்கு 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மழை வெள்ளத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதே நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணியின் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதே போன்று உதயம் திரையரங்கம் அருகே மழை நீர் வடிகால் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வடிகால்வாய் அருகே அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் தனது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய குழந்தை மற்றும் செல்ல பிராணியுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மது போதையில் இருந்த அவர் நிலை தடுமாறி மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அருகில் இருந்தவர்கள் மீட்க முற்பட்டும் மூச்சு விட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில், அடிக்கடி இந்த நெடுஞ்சாலை பகுதியில் இந்த பள்ளத்தினால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பாதுகாப்பு ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் பள்ளத்தில் விழுந்த ஒருவர் உயிரிழந்த பிறகு தடுப்புகள் அமைப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும், வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், இது போன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும், துரித முறையில் பணிகள் மேற்கொண்டு இருந்தால், இந்த உயிரிழப்புகள் நடைபெற்று இருக்காது எனவும் கூறுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், மழை நீர் வடிகால் பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வருகின்றன. 10 அடிக்கு 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மழை வெள்ளத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதே நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணியின் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதே போன்று உதயம் திரையரங்கம் அருகே மழை நீர் வடிகால் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வடிகால்வாய் அருகே அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் தனது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய குழந்தை மற்றும் செல்ல பிராணியுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மது போதையில் இருந்த அவர் நிலை தடுமாறி மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அருகில் இருந்தவர்கள் மீட்க முற்பட்டும் மூச்சு விட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில், அடிக்கடி இந்த நெடுஞ்சாலை பகுதியில் இந்த பள்ளத்தினால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பாதுகாப்பு ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் பள்ளத்தில் விழுந்த ஒருவர் உயிரிழந்த பிறகு தடுப்புகள் அமைப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும், வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், இது போன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும், துரித முறையில் பணிகள் மேற்கொண்டு இருந்தால், இந்த உயிரிழப்புகள் நடைபெற்று இருக்காது எனவும் கூறுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.