ETV Bharat / state

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

author img

By

Published : Oct 13, 2020, 5:20 AM IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே சாராய வியாபாரி ஒருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து  சிறையிலடைத்தனர்.

Arrested
Arrested

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரோஷணை பகுதியைச் சேர்ந்தவர் கிடங்கலான் (எ) சரண்ராஜ்(30). சாராய வியாபாரியான இவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் காய்ச்சுவது, கடத்துவது, விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எனவே இவரது நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், சரண்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, பரிந்துரையை ஏற்று சரண்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சரண்ராஜை இன்று(அக்12) காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.


இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரோஷணை பகுதியைச் சேர்ந்தவர் கிடங்கலான் (எ) சரண்ராஜ்(30). சாராய வியாபாரியான இவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் காய்ச்சுவது, கடத்துவது, விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எனவே இவரது நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், சரண்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, பரிந்துரையை ஏற்று சரண்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சரண்ராஜை இன்று(அக்12) காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.


இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.