ETV Bharat / state

ஐசிஐசிஐ வங்கி மேலாளருக்கு கரோனா...!

author img

By

Published : Jul 20, 2020, 4:49 PM IST

விழுப்புரம்: நகரில் இயங்கி வரும் ஐசிஐசிஐ வங்கித் தலைமை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வங்கி உடனடியாக மூடப்பட்டது.

வங்கி மேலாளருக்கு கரோனா
வங்கி மேலாளருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகக் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், இதுவரை 2 ஆயிரத்து 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 20) விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இயங்கிவரும் ஐசிஐசிஐ வங்கி தலைமை மேலாளர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வங்கி உடனடியாக மூடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகக் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், இதுவரை 2 ஆயிரத்து 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 20) விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இயங்கிவரும் ஐசிஐசிஐ வங்கி தலைமை மேலாளர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வங்கி உடனடியாக மூடப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.