ETV Bharat / state

யாகத்தில் அமைச்சர் மிஸ்ஸிங்; ரத்தத்தின் ரத்தங்கள் விரக்தி!

author img

By

Published : Jun 22, 2019, 4:36 PM IST

Updated : Jun 22, 2019, 5:09 PM IST

விழுப்புரம்: மழை வேண்டி அமராவதி விநாயகர் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்காதது ரத்தத்தின் ரத்தங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவின் ஆர்ப்பாட்டத்தையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் கோயில்களில் யாகம் நடத்தி சரிகட்டிவிடலாம் என எண்ணிய முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டனர்.

மழை வேண்டி விழுப்புரத்தில் நடைபெற்ற யாகம்

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காமராஜர் சாலையில் உள்ள அமராவதி விநாயகர் கோயிலில் யாகம் நடத்த அதிமுகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சி.வி. சண்முகம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை யாகத்தில் பங்கேற்காததால் விரக்தியடைந்த ரத்தத்தின் ரத்தங்கள் பெயரளவுக்கு மட்டுமே யாகம் நடத்திவிட்டு நகர்ந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவின் ஆர்ப்பாட்டத்தையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் கோயில்களில் யாகம் நடத்தி சரிகட்டிவிடலாம் என எண்ணிய முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டனர்.

மழை வேண்டி விழுப்புரத்தில் நடைபெற்ற யாகம்

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காமராஜர் சாலையில் உள்ள அமராவதி விநாயகர் கோயிலில் யாகம் நடத்த அதிமுகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சி.வி. சண்முகம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை யாகத்தில் பங்கேற்காததால் விரக்தியடைந்த ரத்தத்தின் ரத்தங்கள் பெயரளவுக்கு மட்டுமே யாகம் நடத்திவிட்டு நகர்ந்தனர்.

Intro:விழுப்புரம்: மழைவேண்டி விழுப்புரம் அமராவதி விநாயகர் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்கவில்லை. இதனால் அதிமுகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.Body:தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குடிநீர் பிரச்னையை சரிவர கையாளத அதிமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று திமுக தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே எதிர்கட்சிகளின் போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் யாகம் நடத்துமாறு கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள அமராவதி விநாயகர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்த அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அமைச்சரும், மாவட்ட செயலாருமான சி.வி.சண்முகம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Conclusion:ஆனால், கடைசி வரையில் அமைச்சர் சண்முகம் வராததால், விரக்தி அடைந்த ரத்தத்தின் ரத்தங்கள் பெயரளவுக்கு சில நிமிடங்கள் மட்டுமே யாகத்தை நடத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
Last Updated : Jun 22, 2019, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.