ETV Bharat / state

லாரி மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம் - Car collision on a lorry in Kallakurichi

கள்ளக்குறிச்சி: கூட்டுரோடு அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த எட்டு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி மீது கார் மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை
author img

By

Published : Nov 24, 2019, 4:55 AM IST


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், முனி வாழை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் காரில் நிகழ்ச்சி ஒன்றிற்காக பெங்களூருக்கு சென்றனர். பின்னர், காரில் வீடு திரும்பும்போது கள்ளக்குறிச்சி கூட்டுரோடு அருகே சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தியாகதுருகத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் செல்வி, பச்சையம்மாள், கலைச்செல்வி, ஆகிய மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் லேசான காயங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி மீது கார் மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை

இச்சம்பவம் குறித்து சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், முனி வாழை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் காரில் நிகழ்ச்சி ஒன்றிற்காக பெங்களூருக்கு சென்றனர். பின்னர், காரில் வீடு திரும்பும்போது கள்ளக்குறிச்சி கூட்டுரோடு அருகே சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தியாகதுருகத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் செல்வி, பச்சையம்மாள், கலைச்செல்வி, ஆகிய மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் லேசான காயங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி மீது கார் மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை

இச்சம்பவம் குறித்து சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

Intro:tn_vpm_01_car_accident_one_person_death_vis_tn10026.mp4Body:tn_vpm_01_car_accident_one_person_death_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி அருகே இரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் மரணமடைந்தார், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, முனி வாழை, ஆகிய ஊர்களை சேர்ந்த உறவினர்கள் 9 பேர் ஒரு செவர்லெட் கார் மூலம் கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு, நேற்று இரவு கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இளங்கோ என்ற லாரி ஓட்டுனர் கேரளாவிலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி மூலம் கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் தூக்கம் வருகிறது என்று லாரியை வி கூட்டுரோடு என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு லாரியில் உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரியைஇங்கு நிறுத்தக்கூடாது கிளம்பு என்ன கூறியுள்ளனர்.அப்போது லாரி ஓட்டுநர் லாரியை கள்ளக்குறிச்சி மார்க்கமாக நெடுஞ்சாலையில் ஏற்றியுள்ளார். அப்போது பெங்களூரில் இருந்து வந்த அந்த கார் லாரியின் பின்பக்கத்தில் நுழைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து வந்த தியாகதுருகத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் செல்வி பச்சையம்மாள் கலைச்செல்வி ஆகிய மூன்று பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். காயம்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.