ETV Bharat / state

பாட்டிலால் தாக்கி இளைஞர் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம்: பாட்டிலால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டிலால் தாக்கி கொலை செய்த சம்பவம் - போலீஸ் வலைவீச்சு
author img

By

Published : Mar 26, 2019, 4:25 PM IST


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடிகைகுறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் நேற்று தனது தாய் சிறுநிலாவிடம் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில், அதிகாலை மட்டிகை குறிச்சி ஆற்றங்கரை வழியே சென்ற ஒருவர், அப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதற்கிடையே சடலத்தை பார்த்த ஊர்மக்கள் வெங்கடேசன் என்று அடையாளம் கண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கச்சிராயபாளையம் காவல்துறையினர், வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர். அப்போது, வெங்கடேசனின் முகத்தில் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடிகைகுறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் நேற்று தனது தாய் சிறுநிலாவிடம் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில், அதிகாலை மட்டிகை குறிச்சி ஆற்றங்கரை வழியே சென்ற ஒருவர், அப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதற்கிடையே சடலத்தை பார்த்த ஊர்மக்கள் வெங்கடேசன் என்று அடையாளம் கண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கச்சிராயபாளையம் காவல்துறையினர், வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர். அப்போது, வெங்கடேசனின் முகத்தில் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Intro:Body:

Murder in kallakurichi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.