ETV Bharat / state

ஆரோவில் காட்டில் திடீரென கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த பறவைகள்!

author img

By

Published : Dec 29, 2020, 6:37 PM IST

Updated : Dec 29, 2020, 6:59 PM IST

விழுப்புரம்: ஆரோவில் காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த பறவைகள்!
கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த பறவைகள்!

விழுப்புரம் மாவட்டத்தின் சர்வதேச நகரம், ஆரோவில். இந்தப் பகுதியை அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் புகலிடமாகக் கொண்டுள்ளன. இவற்றிற்கு சில அடையாளம் தெரியாத நபர் தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தப் பறவைகளை வேட்டையாடுகின்றனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) அப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் வசித்து வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் திடீரென கொத்து கொத்தாக மயங்கி விழுந்தன. சிறிது நேரத்தில் அப்பறவைகள் உயிரிழக்கத் தொடங்கின.

தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பறவைகளின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் பறவைகளுக்கு உணவளிப்பது போல திட்டமிட்டு விஷம் வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த பறவைகள்!

இப்பகுதியில் வேட்டையாடி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:குன்னூரில் அரிய வகை பறவை இனங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தின் சர்வதேச நகரம், ஆரோவில். இந்தப் பகுதியை அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் புகலிடமாகக் கொண்டுள்ளன. இவற்றிற்கு சில அடையாளம் தெரியாத நபர் தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தப் பறவைகளை வேட்டையாடுகின்றனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) அப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் வசித்து வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் திடீரென கொத்து கொத்தாக மயங்கி விழுந்தன. சிறிது நேரத்தில் அப்பறவைகள் உயிரிழக்கத் தொடங்கின.

தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பறவைகளின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் பறவைகளுக்கு உணவளிப்பது போல திட்டமிட்டு விஷம் வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த பறவைகள்!

இப்பகுதியில் வேட்டையாடி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:குன்னூரில் அரிய வகை பறவை இனங்கள்!

Last Updated : Dec 29, 2020, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.