ETV Bharat / state

அரசு வழங்கிய தரமற்ற நெல் - பாதிப்படைந்த விவசாயி இழப்பீடு தர கோரிக்கை - Villupuram news latest

விழுப்புரம்: அரசு வழங்கிய தரமற்ற நெல் விதைகளை பயிரிட்டு பாதிப்படைந்த உளுந்தூர்பேட்டை விவசாயி இழப்பீடு அளிக்க வழங்க கோரியுள்ளார்.

farmer
author img

By

Published : Oct 9, 2019, 3:08 PM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிருடுவதற்காக பண்ருட்டியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்தில் உள்ள விதைக் கிடங்கில் 80 கிலோ அளவுள்ள என்.எல்.ஆர். 34449 என்ற புதிய ரக நெல் விதைகளை வாங்கி நேரடி நெல் விதைப்புசெய்தார்.

இந்த நெல் விதைக்கப்பட்டு ஆறு தினங்கள் கடந்த பின்பும் முளைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வேளாண்மை அலுவலரை அணுகியபோது வயலில் உள்ள நீரை வடிகட்டி உலர வைத்தால் நெல் முளைப்பு வரும் என கூறியுள்ளார். ஆனால் பதினைந்து நாள்களாகியும் நெல் முளைக்காமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த விவசாயி மீண்டும் வேளாண் அலுவலரை நாடியுள்ளார். அப்போது அந்த அலுவலர் அலட்சியமாக மீண்டும் வேறு ரக நெல் அளிக்கின்றோம் நடவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

அரசின் தரமற்ற நெல் விதைகளால் பாதிக்கப்பட்ட விவசாயி

எனவே தரமற்ற நெல் விதைகளை கொடுத்து ஏமாற்றிய வேளாண்மை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். அரசு வேளாண்மை துறை அலுவலரால் சான்றிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நெல் முளைக்காமல் இருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிருடுவதற்காக பண்ருட்டியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்தில் உள்ள விதைக் கிடங்கில் 80 கிலோ அளவுள்ள என்.எல்.ஆர். 34449 என்ற புதிய ரக நெல் விதைகளை வாங்கி நேரடி நெல் விதைப்புசெய்தார்.

இந்த நெல் விதைக்கப்பட்டு ஆறு தினங்கள் கடந்த பின்பும் முளைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வேளாண்மை அலுவலரை அணுகியபோது வயலில் உள்ள நீரை வடிகட்டி உலர வைத்தால் நெல் முளைப்பு வரும் என கூறியுள்ளார். ஆனால் பதினைந்து நாள்களாகியும் நெல் முளைக்காமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த விவசாயி மீண்டும் வேளாண் அலுவலரை நாடியுள்ளார். அப்போது அந்த அலுவலர் அலட்சியமாக மீண்டும் வேறு ரக நெல் அளிக்கின்றோம் நடவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

அரசின் தரமற்ற நெல் விதைகளால் பாதிக்கப்பட்ட விவசாயி

எனவே தரமற்ற நெல் விதைகளை கொடுத்து ஏமாற்றிய வேளாண்மை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். அரசு வேளாண்மை துறை அலுவலரால் சான்றிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நெல் முளைக்காமல் இருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Intro:tn_vpm_01_farmar_news_vis_tn10026Body:tn_vpm_01_farmar_news_vis_tn10026Conclusion:உளுந்தூர்பேட்டை அருகே அரசு வழங்கிய தரமற்ற நெல்விதைகளால் விவசாயி பாதிப்பு அடைந்துள்ளனர் !!

விழப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிருடுவதற்காக பண்ருட்டியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்தில் உள்ள விதை கிடங்கில் 80 கிலோ அளவுள்ள NLR 34449 என்ற புதிய ரக நெல் விதைகளை வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்தார். விதைத்த நெல் ஆறு தினங்கள் கடந்த பின்பு முளைப்பு விடவில்லை. இதுகுறித்து வேளாண்மை அலுவலரை அணுகியபோது வயலில் உள்ள நீரை வடிகட்டி உலர வைத்தால் நெல் முளைப்பு வரும் என கூறினார் ஆனால் பதினைந்து தினங்கள் ஆகியும் முளைப்பு விடவில்லை அதிர்ச்சியடைந்த விவசாயி மீண்டும் வேளாண் அலுவலரை நாடியபோது அலட்சியமாக மீண்டும் வேறு ரக நெல் தறுகின்றோம் நடவு செய்யுங்கள் என கூறியுள்ளார். அரசு வேளாண்மை துறை அலுவலரால் சான்றிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நெல் முளைக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தரமற்ற நெல் விதைகளை கொடுத்து விவசாயி சுந்தரமூர்த்தி ஏமாற்றிய வேளாண்மை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.