ETV Bharat / state

கல்யாண வீட்டை துக்க வீடாக மாற்றிய திருமண பந்தல்!

author img

By

Published : Sep 17, 2019, 3:18 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இரும்பு பந்தலிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

7 years old boy died by electric shock

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் வர்னீஷ்வரன் (7), கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தான். வினோத்தின் உறவினர் ரமேஷ் என்பவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள ரமேஷின் வீட்டில் நடைபெறவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வினோத் தன் குடும்பத்தோடு சென்றார்.

திருமண நிகழ்ச்சி நடைபெற்ற வீடு

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இரும்புக் குழாயிலான பந்தல் அமைத்து, அதில் அலங்கார சீரியல் செட் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த அலங்கார சீரியல் செட் விளக்குகளிலிருந்த மின்வட வயர்கள் இரும்புக் குழாயில் உரசியதால் அதிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனையறியாமல் பந்தலின் உள்புறமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வர்னீஷ்வரன், மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த இரும்புக் குழாயை தொட்ட வேகத்தில் சரிந்து விழுந்துள்ளான்.

7 years old boy died  electric shock
புகைப்படத்தின் நடுவில் இருக்கும் சிறுவன் வர்னீஸ்வரன்

இதைக் கண்டு அலறியடித்து ஓடிய உறவினர்கள் உடனடியாக சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சிறுவன் இறந்ததை தாங்க முடியாத சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் வர்னீஷ்வரன் (7), கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தான். வினோத்தின் உறவினர் ரமேஷ் என்பவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள ரமேஷின் வீட்டில் நடைபெறவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வினோத் தன் குடும்பத்தோடு சென்றார்.

திருமண நிகழ்ச்சி நடைபெற்ற வீடு

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இரும்புக் குழாயிலான பந்தல் அமைத்து, அதில் அலங்கார சீரியல் செட் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த அலங்கார சீரியல் செட் விளக்குகளிலிருந்த மின்வட வயர்கள் இரும்புக் குழாயில் உரசியதால் அதிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனையறியாமல் பந்தலின் உள்புறமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வர்னீஷ்வரன், மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த இரும்புக் குழாயை தொட்ட வேகத்தில் சரிந்து விழுந்துள்ளான்.

7 years old boy died  electric shock
புகைப்படத்தின் நடுவில் இருக்கும் சிறுவன் வர்னீஸ்வரன்

இதைக் கண்டு அலறியடித்து ஓடிய உறவினர்கள் உடனடியாக சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சிறுவன் இறந்ததை தாங்க முடியாத சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:tn_vpm_01_shocking_power_siruvan_death_vis_tn10026Body:tn_vpm_01_shocking_power_siruvan_death_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வினோத் இவருடைய மகன் வர்ணீஷ்வரன் வயது 7, சிறுவன் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின்
தந்தை வினோத்தின் உறவினர் ரமேஷ் என்பவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி இன்று கள்ளக்குறிச்சி ஏமப்பேரிலுள்ள வினோத்தின் உறவினர் ரமேஷ் வீட்டிலேயே நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோருடன் பங்கேற்பதற்காக சிறுவன் வர்னீஷ் வரன் இன்று பள்ளிக்கு செல்லவில்லை. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ரமேஷ் வீட்டில் இரும்பு பைப்பிலான பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பந்தலில் அலங்கார சீரியல் செட் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அலங்கார சீரியல் செட் விளக்குகளில் மின் இணைப்பு பொருத்தப்பட்டிருந்தபோது, அந்த மின் இணைப்பானது பந்தலின் இரும்பு பைப்பில் பட்டு அதில் மின்சாரம் இருந்துள்ளது.பந்தலின் உள்புறமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வர்னீஷ்வரன் பந்தலின் இரும்பு பைப்பை தொட்டு விளையாடிய போது அதிலிருந்த மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இதைக் கண்ட உறவினர்கள் கூச்சலிட்டு அலறி சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.சிறுவன் இறந்த துயர சம்பவத்தை எண்ணியும் தாளாத துக்கத்தையும் தாங்க முடியாத சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்கதறி அழுதனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.