ETV Bharat / state

கள்ளக்குறிச்சி அருகே 20 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், பைக் திருட்டு! - Kallakurichi gold theft

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ஐம்பதாயிரம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிலிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

theft
author img

By

Published : Aug 13, 2019, 2:12 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள இடையர் சந்து பகுதியில் வசித்துவருபவர் விவசாயி ரமேஷ். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்தக் கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் ரமேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். பிறகு ரமேஷ், அவரது மனைவி விஜயா விரைந்துவந்து பார்த்தபோது கதவு திறந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

ரமேஷ் வீட்டில் நகை, பணத்தை திருடிவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடர்கள் திருடி தப்பிச் சென்றுள்ளனர்.

இடையர் சந்துவில் நகைகள் திருட்டு

இது குறித்து தகவலறிந்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் குற்றப் பிரிவு அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

மேலும், திருட்டுக்குப் பயன்படுத்திய கத்தி போன்ற ஆயுதங்களை திருடர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வாரம் இதே தெருவில் ஒரு இருசக்கர வாகனம் திருடுபோன நிலையில், தற்போது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள இடையர் சந்து பகுதியில் வசித்துவருபவர் விவசாயி ரமேஷ். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்தக் கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் ரமேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். பிறகு ரமேஷ், அவரது மனைவி விஜயா விரைந்துவந்து பார்த்தபோது கதவு திறந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

ரமேஷ் வீட்டில் நகை, பணத்தை திருடிவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடர்கள் திருடி தப்பிச் சென்றுள்ளனர்.

இடையர் சந்துவில் நகைகள் திருட்டு

இது குறித்து தகவலறிந்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் குற்றப் பிரிவு அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

மேலும், திருட்டுக்குப் பயன்படுத்திய கத்தி போன்ற ஆயுதங்களை திருடர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வாரம் இதே தெருவில் ஒரு இருசக்கர வாகனம் திருடுபோன நிலையில், தற்போது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:tn_vpm_01_20_savaran_theft_vis_tn10026Body:tn_vpm_01_20_savaran_theft_vis_tn10026Conclusion:பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை ! திருடிய நகைய எடுத்து செல்ல பக்கத்து வீட்டில் நிறுத்தி வந்த பைக்குடன் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் !

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி யில் உள்ள இடையர் சந்து பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் இவர் விவசாயீ .இவர் கடந்த இரண்டு தினங்ககளுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்த்திற்க்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார் .இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் ரமேஷ் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.பிறகு ரமேஷ் ந் மனைவி விஜயா விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்க பட்டும் கதவுகள் திறந்து காணபட்டது .உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த பீரோக்கள் உடைக்கபட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது .மேலும் ரமேஷ் வீட்டில் நகை பணம் திருடிவிட்டு அவரது விட்டின் அருகே உள்ள ஜெயபிரகாஷ் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கபட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி கொண்டு தப்பி ஓடினர் .மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை கொள்ளையர்கள் வீட்டிலேயே விட்டு சென்றனர்.கடந்த வாரம் இதே தெருவில் ஒரு இருசக்கர வாகனம் திருடு போனது குறிப்பிடதக்கது .தொடர்ந்து இத்தெருவில் அரங்கேறும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர் .மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலிசார் குற்ற பிரிவு போலிசாருடன் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடரு திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.