ETV Bharat / state

பல பெண்களை சீரழித்த கணவன் மீது மனைவி புகார்

வேலூர்: தன் வாழ்க்கையையும், பல பெண்களின் வாழ்க்கையையும் சீரழித்த தன் கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவியே உதவி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர்
author img

By

Published : Jul 20, 2019, 12:03 AM IST

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா(28) இவர் உதவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார் அந்த மனுவில்,

திருப்பத்தூர்

”திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நான் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரில் பேஷன் டிசைனராக பணியாற்றி கொண்டிருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா, தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (33) எனக்கு முகநூல் வாயிலாக அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் நண்பராக பழகிய அவர் ஒரு கட்டத்தில் என்னை காதலிப்பதாகவும், என்னையே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது பேச்சைக் கேட்டு நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

பிறகு 2013ஆம் ஆண்டு வீட்டிற்கு தெரியாமல் பெங்களூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்பு வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச்சென்ற வாஞ்சிநாதன் என் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவழித்தார். இதைக்கண்ட என் தந்தை எங்களை திருப்பத்தூருக்கு வரும்படி அழைத்தார் . அதன்படி 2015 ஆம் ஆண்டு திருப்பத்தூருக்கு வந்தோம்.

என் தந்தை ரூ.3 லட்சம் செலவழித்து திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் கவரிங் நகைக் கடையை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்நிலையில் வியாபாரத்தை பெருக்க வேண்டும் எனக்கூறி எனக்கு சொந்தமான 55 பவுன் தங்க நகைகளை விற்று வாஞ்சிநாதன் செலவழித்தார். அதுமட்டுமின்றி என் தந்தையிடமும், என் உறவினர்களிடமும் ரூ.7 லட்சம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில் தானிப்பாடிக்குச் சென்ற அவர் திருப்பத்தூருக்கு திரும்பி வரவில்லை, அவரைத்தேடி நான் அங்கு சென்றபோது அவரது தாயார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி என்னை வெளியே போகச்சென்னார், அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது வாஞ்சிநாதன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், பல பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தையும் நகையையும் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தானிப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது அங்கு வந்த வாஞ்சிநாதன் என்னை நடுரோட்டில் வைத்து அடித்தார் மேலும் நான் பலபேரை காதலிக்கிறேன் நீ என்னை விட்டுச்சென்றால் எனக்கு கவலையில்லை என்று கூறினார்.

இதையடுத்து திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வாஞ்சிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள திருப்பத்தூர் சப் - கலெக்டர் பங்கஜம் திருப்பத்தூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா(28) இவர் உதவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார் அந்த மனுவில்,

திருப்பத்தூர்

”திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நான் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரில் பேஷன் டிசைனராக பணியாற்றி கொண்டிருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா, தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (33) எனக்கு முகநூல் வாயிலாக அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் நண்பராக பழகிய அவர் ஒரு கட்டத்தில் என்னை காதலிப்பதாகவும், என்னையே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது பேச்சைக் கேட்டு நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

பிறகு 2013ஆம் ஆண்டு வீட்டிற்கு தெரியாமல் பெங்களூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்பு வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச்சென்ற வாஞ்சிநாதன் என் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவழித்தார். இதைக்கண்ட என் தந்தை எங்களை திருப்பத்தூருக்கு வரும்படி அழைத்தார் . அதன்படி 2015 ஆம் ஆண்டு திருப்பத்தூருக்கு வந்தோம்.

என் தந்தை ரூ.3 லட்சம் செலவழித்து திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் கவரிங் நகைக் கடையை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்நிலையில் வியாபாரத்தை பெருக்க வேண்டும் எனக்கூறி எனக்கு சொந்தமான 55 பவுன் தங்க நகைகளை விற்று வாஞ்சிநாதன் செலவழித்தார். அதுமட்டுமின்றி என் தந்தையிடமும், என் உறவினர்களிடமும் ரூ.7 லட்சம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில் தானிப்பாடிக்குச் சென்ற அவர் திருப்பத்தூருக்கு திரும்பி வரவில்லை, அவரைத்தேடி நான் அங்கு சென்றபோது அவரது தாயார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி என்னை வெளியே போகச்சென்னார், அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது வாஞ்சிநாதன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், பல பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தையும் நகையையும் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தானிப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது அங்கு வந்த வாஞ்சிநாதன் என்னை நடுரோட்டில் வைத்து அடித்தார் மேலும் நான் பலபேரை காதலிக்கிறேன் நீ என்னை விட்டுச்சென்றால் எனக்கு கவலையில்லை என்று கூறினார்.

இதையடுத்து திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வாஞ்சிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள திருப்பத்தூர் சப் - கலெக்டர் பங்கஜம் திருப்பத்தூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro: பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கணவன் மீது மனைவி திருப்பத்தூர் சப் - கலெக்டரிடம் புகார்.


Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா( 28).

பட்டதாரியான இவர் திருப்பத்தூர், உதவி கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நான் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரில் பேஷன் டிசைனராக பணியாற்றி கொண்டிருந்த போது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா, தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (33) எனக்கு முகநூல் வாயிலாக எனக்கு அறிமுகம் ஆனார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய வாஞ்சிநாதன் ஒரு கட்டத்தில் என்னை காதலிப்பதாகவும், என்னையே திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறினார், அவரது பேச்சை கேட்டு ஏமாந்த நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

பிறகு 2013 ஆம் ஆண்டு வீட்டிற்கு தெரியாமல் பெங்களூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.

பின் நாங்கள் திருவண்ணாமலை தானிப்பாடிக்குச் சென்றோம் அங்கு அவரது பெற்றோர்கள் எங்களை ஏற்கவில்லை.

பின்பு வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச்சென்ற வாஞ்சிநாதன் என் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவழித்தார், இதைக்கண்ட என் தந்தை எங்களை திருப்பத்தூருக்கு வரும்படி அழைத்தார் , அதன்படி 2015 ஆம் ஆண்டு திருப்பத்தூருக்கு வந்தோம்.

என் தந்தை ரூ.3 லட்சம் செலவழித்து திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் கவரிங் நகைகடையை ஏற்படுத்திக்கொடுத்தார்.இந்நிலையில் வியாபாரத்தை பெருக்க வேண்டும் எனக்கூறி எனக்கூறி எனக்கு சொந்தமான 55 பவுன் தங்க நகைகளை விற்று செலவழித்தார், இதுமட்டுமின்றி என் தந்தையிடம், என் உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த வில்லை.

மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான வாஞ்சிநாதன் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவழித்தார்.

இதனால் கடன் கொடுத்தவர்களிடம் பதில் கூற முடியாமல் நான் அவதிப்பட்டேன், இதையெல்லாம் தட்டிக்கேட்ட போது என்னை அவர் கொடுமைபடுத்த தொடங்கினார் தினமும் குடித்து விட்டு என்னை கொடுமைப்படுத்தினார்.

இந்நிலையில் தானிப்பாடிக்குச் சென்ற அவர் திருப்பத்தூருக்கு திரும்ப வரவில்லை, அவரைத்தேடி நான் அங்கு சென்ற போது அவரது தாயார் வசந்தாவிடம் நடந்தவற்றை கூறியபோது அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி என்னை வெளியே போகச்சென்னார், அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது வாஞ்சிநாதன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதும், பல பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தையும் நகையையும் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தானிப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்சென்ற போது அங்கு வந்த வாஞ்சிநாதன் என்னை நடுரோட்டில் வைத்து அடித்தார் மேலும் நான் பலபேரை காதலிக்கின்றேன் நீ என்னை விட்டுச்சென்றால் எனக்கு கவலையில்லை என்று கூறினார்.

இதையடுத்து திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் உயர் அதிகாரிகள் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வாஞ்சிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


Conclusion: இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள திருப்பத்தூர் சப் - கலெக்டர் பங்கஜம் திருப்பத்தூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதன்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணெ மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.