ETV Bharat / state

வேலூர் மக்களவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்பு!

author img

By

Published : Aug 4, 2019, 10:49 PM IST

வேலூர்: நாளை நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

praveshkumar

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பும் பணிகள் நிறைவுபெற்றன. இந்நிலையில், நாளை நடைபெறும் தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 2 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 320 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பும் பணிகள் நிறைவுபெற்றன. இந்நிலையில், நாளை நடைபெறும் தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 2 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 320 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:நாளை நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் உள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்Body:வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது இதையொட்டி தேர்தல் ஏற்பாடுகளை அதிகாரிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர் குறிப்பாக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது இந்த நிலையில் நாளை நடைபெறும் வேலூர் மக்களவை தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 1553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இதில் 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 2 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 320 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 816 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் தேர்தல் வாக்குப்பதிவின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன தமிழக காவல்துறை மற்றும் 20 கம்பெனி துணை ராணுவப் படை உட்பட 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் தேர்தல் வாக்குப் பதிவை சுமுகமாக நடத்தி முடிக்க தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.