ETV Bharat / state

பொன்முடி திகார் சிறைக்கு செல்வார் - வேலூர் இப்ராஹிம்

author img

By

Published : Jul 19, 2023, 9:49 AM IST

கர்நாடகாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் கூட்டம் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும், கொள்ளை அடிக்கும் கட்சிகளும் வாரிசு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

vellore ibrahim
வேலூர் இப்ராஹிம்

பொன்முடி திகார் சிறைக்கு செல்வார் வேலூர் இப்ராஹிம் பேட்டி

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாளச் சாக்கடை திட்டம், தூய்மைப் பணி நிறைவேற்றாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வேலூர் மாநகராட்சி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பாஜக சிறுபான்மையினர் தேசிய பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ரத்தினவேலிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்னைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றும், அதனை நிறைவேற்றிட மாநகர ஆணையர் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், “பாஜகவினர் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக போராடும் பட்சத்தில் காவல் துறையை பயன்படுத்தி, பாஜக நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். இது கண்டித்தக்க செயல். திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை முறைகேடாக பயன்படுத்தியதால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமலாக்கதுறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கும் செல்வார். வரும் மூன்று மாதங்களில் மேலும் பல அமைச்சர்கள் சிக்குவார்கள்.

ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் பிரதமரின் 9 ஆண்டு கால சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கச் சென்றால், அங்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் அதை தடுத்தனர். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றால், அங்கு வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் முன் வரவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் நேர்மையாக ஆட்சி செய்கிறார் என்றால், பாஜகவின் பிரச்சாரங்களுக்கு தடை செய்யக்கூடாது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மக்களுக்காக, பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றிட 3,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தமிழ்நாடு அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

மேலும், பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். அவர் சொல்லும் காரணம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உள்ளது. அதனால் எதிர்க்கிறோம் என சட்ட ஆணையத்திற்கு அவர் அனுப்புகிறார். எந்த விதத்தில் சிறுபான்மையின மக்களுக்கு பொது சிவில் சட்டம் எதிராக உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். இப்படியே பொய் சொல்லி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வருகிறார்.

பொது சிவில் சட்டம் இன்னும் முன் வடிவில் வரவில்லை. அதில் என்னென்ன சரத்துக்கள் உள்ளது என்பது தெரியாமல் எதிர்க்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களின் வாக்கு வங்கிக்காக பேசி வருகிறார். கர்நாடகாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் கூட்டம், பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. கொள்ளை அடிக்கும் காட்சிகளும் வாரிசு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தனர். இவர்கள் ஒன்றிணைவது மக்களை ஏமாற்றும் செயல்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெளியேறு.. வெளியேறு... வேலூர் இப்ராஹீமை விரட்டிய இஸ்லாமியர்கள்!

பொன்முடி திகார் சிறைக்கு செல்வார் வேலூர் இப்ராஹிம் பேட்டி

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாளச் சாக்கடை திட்டம், தூய்மைப் பணி நிறைவேற்றாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வேலூர் மாநகராட்சி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பாஜக சிறுபான்மையினர் தேசிய பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ரத்தினவேலிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்னைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றும், அதனை நிறைவேற்றிட மாநகர ஆணையர் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், “பாஜகவினர் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக போராடும் பட்சத்தில் காவல் துறையை பயன்படுத்தி, பாஜக நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். இது கண்டித்தக்க செயல். திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை முறைகேடாக பயன்படுத்தியதால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமலாக்கதுறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கும் செல்வார். வரும் மூன்று மாதங்களில் மேலும் பல அமைச்சர்கள் சிக்குவார்கள்.

ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் பிரதமரின் 9 ஆண்டு கால சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கச் சென்றால், அங்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் அதை தடுத்தனர். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றால், அங்கு வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் முன் வரவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் நேர்மையாக ஆட்சி செய்கிறார் என்றால், பாஜகவின் பிரச்சாரங்களுக்கு தடை செய்யக்கூடாது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மக்களுக்காக, பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றிட 3,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தமிழ்நாடு அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

மேலும், பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். அவர் சொல்லும் காரணம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உள்ளது. அதனால் எதிர்க்கிறோம் என சட்ட ஆணையத்திற்கு அவர் அனுப்புகிறார். எந்த விதத்தில் சிறுபான்மையின மக்களுக்கு பொது சிவில் சட்டம் எதிராக உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். இப்படியே பொய் சொல்லி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வருகிறார்.

பொது சிவில் சட்டம் இன்னும் முன் வடிவில் வரவில்லை. அதில் என்னென்ன சரத்துக்கள் உள்ளது என்பது தெரியாமல் எதிர்க்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களின் வாக்கு வங்கிக்காக பேசி வருகிறார். கர்நாடகாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் கூட்டம், பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. கொள்ளை அடிக்கும் காட்சிகளும் வாரிசு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தனர். இவர்கள் ஒன்றிணைவது மக்களை ஏமாற்றும் செயல்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெளியேறு.. வெளியேறு... வேலூர் இப்ராஹீமை விரட்டிய இஸ்லாமியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.