ETV Bharat / state

சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுபடுத்தும் பணி! - vellore fort under smart city scheme

வேலூர்: சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் 33 கோடி ரூபாய் மதிப்பில் வேலூர் கோட்டையை அழகுபடுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

vellore-ford-developement-under-smart-city-scheme
author img

By

Published : Sep 25, 2019, 8:37 AM IST

இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முதலாக சிப்பாய் கலகம் நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. மன்னர்கள் காலத்தில் பாதுகாப்பு அரணாக இந்தக் கோட்டை திகழ்ந்துவந்தது. இதில்தான் மன்னர் திப்புசுல்தானின் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

நான்கு புறமும் கற்கலால் அழகுற அமையப்பெற்ற இந்தக் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகம், கோட்டைக்கு வெளிப்புறத்தில் உள்ள பூங்காவைச் சுற்றிப்பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.

வேலூர் கோட்டை அகழி தூர்வாரும் பணி

இந்நிலையில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுபடுத்த மாநகராட்சி, தொல்லியல் துறை இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி ரூ.33 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை உள்புறம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, வண்ண விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் கோட்டை அழகாகத் தெரியும் வகையில் அலங்கரிப்பது, கோட்டை முன்புறமுள்ள அகழியை தூர்வாரி படகுசவாரி ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் முதல்கட்டமாக அகழியை தூர்வாரும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு அகழி தூர்வார்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சென்னையிலிருந்து நான்கு நவீன மிதவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.

தற்போது இயந்திரங்கள் மூலம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் காணப்படும் கழிவுகள் தூர்வாரப்பட்டுவருகிறது. விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தகட்டமாக கோட்டை உள்புறம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைத் தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முதலாக சிப்பாய் கலகம் நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. மன்னர்கள் காலத்தில் பாதுகாப்பு அரணாக இந்தக் கோட்டை திகழ்ந்துவந்தது. இதில்தான் மன்னர் திப்புசுல்தானின் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

நான்கு புறமும் கற்கலால் அழகுற அமையப்பெற்ற இந்தக் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகம், கோட்டைக்கு வெளிப்புறத்தில் உள்ள பூங்காவைச் சுற்றிப்பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.

வேலூர் கோட்டை அகழி தூர்வாரும் பணி

இந்நிலையில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுபடுத்த மாநகராட்சி, தொல்லியல் துறை இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி ரூ.33 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை உள்புறம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, வண்ண விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் கோட்டை அழகாகத் தெரியும் வகையில் அலங்கரிப்பது, கோட்டை முன்புறமுள்ள அகழியை தூர்வாரி படகுசவாரி ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் முதல்கட்டமாக அகழியை தூர்வாரும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு அகழி தூர்வார்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சென்னையிலிருந்து நான்கு நவீன மிதவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.

தற்போது இயந்திரங்கள் மூலம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் காணப்படும் கழிவுகள் தூர்வாரப்பட்டுவருகிறது. விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தகட்டமாக கோட்டை உள்புறம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைத் தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Intro:வேலூர் மாவட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுபடுத்தும் விவகாரம்- கோட்டை அகழியை தூர்வாரும் பணிகள் தீவிரம்Body:இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முதலாக சிப்பாய் புரட்சி நடைபெற்றது வேலூர் கோட்டையில் தான் நான்கு புறமும் கற்களால் வடிவமைக்கப்பட்ட வேலூர் கோட்டை இன்றளவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது மன்னர்கள் காலத்தில் மிகச் சிறந்த பாதுகாப்பு அரணாக திகழ்ந்த இந்த கோட்டையில் தான் மன்னர் திப்பு சுல்தான் குடும்பத்தினரை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்து வைத்திருந்தனர் இந்த கோட்டையின் முன்புறம் பாதுகாப்புக்காக அழகிய தோற்றத்தில் அகழி ஒன்று காணப்படுகிறது இதில் வருடம் தோறும் தண்ணீர் வற்றாமல் வந்து கொண்டிருப்பது இதன் தனி சிறப்பாகும். இந்தக் கோட்டை உள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும் கோட்டைக்கு வெளிப்புறத்தில் உள்ள பூங்காவில் பொழுது போக்குவதற்காக நாள் தோறும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுபடுத்த மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது அதன்படி ரூ 33 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை உள்புறம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது இரவு நேரங்களில் வண்ண வண்ண விளக்குகள் அமைத்து அலங்கரிப்பது மற்றும் கோட்டை முன்புறமுள்ள அகழியை தூர்வாரி படகுசவாரி ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது இதில் முதல் கட்டமாக அகழியை தூர்வாரும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது அதன்படி சுமார் ஒரு மீட்டர் ஆழத்திற்கு அகழியை தூர்வாரும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இதற்காக சென்னையிலிருந்து 4 நவீன மிதவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன தற்போது இயந்திரங்கள் மூலம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் காணப்படும் கழிவுகள் தூர்வாரப்பட்டு வருகிறது விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தகட்டமாக கோட்டை உள்புறம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.