ETV Bharat / state

பட்டியலினத்தவருக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கி அரசு உத்தரவு

author img

By

Published : Aug 23, 2019, 7:57 PM IST

வேலூர்: வாணியம்பாடியில் கயிறு கட்டி சடலத்தை இறக்கிய சம்பவத்தை தொடர்ந்து, பட்டியலினத்தவருக்கு 50 சென்ட் நிலத்தை அரசு ஒதுக்கியுள்ளது.

land approval

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், இவர்களுக்கென்று 50 அடியில் இருந்து 60 அடி வரையிலான சுடுகாடு உள்ளது. இங்கு போதிய வசதி இல்லாததால், பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பாலாற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருபுறங்களிலும் செல்லும் பாதையை வேலி அமைத்து வழியை விவசாயிகள் அடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது சடலத்தை பாலாற்று வழியாக அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி குப்பனின் சடலத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆதிதிராவிட மக்களுக்கு நிலத்தை வழங்குமம் அரசு அதிகாரிகள்

இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய் துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ஆதிதிராவிட மக்களுக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், இவர்களுக்கென்று 50 அடியில் இருந்து 60 அடி வரையிலான சுடுகாடு உள்ளது. இங்கு போதிய வசதி இல்லாததால், பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பாலாற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருபுறங்களிலும் செல்லும் பாதையை வேலி அமைத்து வழியை விவசாயிகள் அடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது சடலத்தை பாலாற்று வழியாக அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி குப்பனின் சடலத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆதிதிராவிட மக்களுக்கு நிலத்தை வழங்குமம் அரசு அதிகாரிகள்

இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய் துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ஆதிதிராவிட மக்களுக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

Intro:


தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான வாணியம்பாடி அருகே பல ஆண்டுகளாக சுடுகாடு வசதியில்லாத கிராம மக்களுக்கு 50 சென்ட் இடத்தை ஒதுக்கி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ; ஆதிதிராவிட தனித்துணை ஆட்சியர் கிராம மக்களிடம் நேரில் விசாரணை Body:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் காலனி உள்ளது இந்த காலனி அருகே 50 அடியில் இருந்து சுமார் 60 அடி இடத்தில் இவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் இறந்ததால் அவருடைய சடலத்தை கொண்டு சென்று எரியூட்ட வேண்டும் என்று அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய அந்த சுடுகாட்டை பயன்படுத்த முடியாமல் பிணத்தை அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கி ஆற்றுப் பகுதியில் தகனம் செய்தனர் அருகிலுள்ள விவசாய நிலம் வழியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் இவர்களுக்கு சுடுகாடு இல்லாததால் இம்மக்கள் இருந்துவந்த நிலையில் இதன் செய்தி வெளியானதால் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய் துறையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்குச் சென்று விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினர் அப்போது அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நிலத்தின் வழியாக யாரும் வரவேண்டாம் என்றும் அதற்கான இடத்தை நாங்கள் தரமாட்டோம் என்று தெரிவித்தனர் அதற்குப்பின்பு தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் ஊராட்சி பணதோப்பு பகுதியில் தமிழக அரசு இடம் சுமார் 3.16 ஏக்கர் இருப்பதாக அதில் 50 சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த நிலையில் அரசு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சடலத்தை எடுத்து செல்லும் போது மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என ஆதிதிராவிட மக்கள் தெரிவித்த நிலையில் ஆதிராவிடர் நலத்துறை தனித்துணை ஆட்சியர் வேணு சேகரன் ஆதிதிராவிட நல வட்டாட்சியர் குமரேசன் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் ஆகியோர் நேரில் சென்று கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.