ETV Bharat / state

மாநகராட்சி அலுவலகத்தை திமுக கட்சி அலுவலகமாக மாற்றிய கதிர் ஆனந்தின் ஃபார்முலா..! - கட்சி அலுவலகமாக மாறிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்

வேலூர்: நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து அங்கு குவிந்த கட்சிப் பிரமுகர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், திமுகவின் கட்சி அலுவலகம் போல் காட்சியளித்தது.

vellore corporation building opening ceremony
vellore corporation building opening ceremony
author img

By

Published : Jan 28, 2020, 11:19 AM IST

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கதிர் ஆனந்த் இந்த வெற்றியைப் பெற்றார்.

தேர்தல் வாக்குறுதியில், தன்னை சந்தித்து பொதுமக்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காக வேலூரில் நாடாளுமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார், கதிர் ஆனந்த். அதன்படி தற்போது வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கதிர் ஆனந்த் தனது அலுவலகத்தை அமைத்துள்ளார். இதற்கான திறப்பு விழாவில் திமுக பொருளாளரும், கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

பொதுவாக இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தனியார் இடங்களில் அமைக்கப்படும். ஆனால், வேலூரில் அரசுக்குச் சொந்தமான மாநகராட்சி கட்டடத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்

அலுவலக திறப்பு விழாவில் திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். இதனால் வேலூர் மாநகராட்சி அலுவலகம், திமுக கட்சி அலுவலகம் போல் காணப்பட்டது.

இதையும் படிங்க: 'திரைப்பட டிக்கெட் விலையை குறைக்க வேண்டும்' - டி.ஆர்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கதிர் ஆனந்த் இந்த வெற்றியைப் பெற்றார்.

தேர்தல் வாக்குறுதியில், தன்னை சந்தித்து பொதுமக்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காக வேலூரில் நாடாளுமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார், கதிர் ஆனந்த். அதன்படி தற்போது வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கதிர் ஆனந்த் தனது அலுவலகத்தை அமைத்துள்ளார். இதற்கான திறப்பு விழாவில் திமுக பொருளாளரும், கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

பொதுவாக இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தனியார் இடங்களில் அமைக்கப்படும். ஆனால், வேலூரில் அரசுக்குச் சொந்தமான மாநகராட்சி கட்டடத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்

அலுவலக திறப்பு விழாவில் திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். இதனால் வேலூர் மாநகராட்சி அலுவலகம், திமுக கட்சி அலுவலகம் போல் காணப்பட்டது.

இதையும் படிங்க: 'திரைப்பட டிக்கெட் விலையை குறைக்க வேண்டும்' - டி.ஆர்.

Intro:வேலூர் மாவட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் குவிந்த உடன்பிறப்புகள் திமுக கட்சி அலுவலகம் ஆக மாறிய வேலூர் மாநகராட்சி அலுவலகம்


Body:வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளார் சமீபத்தில் நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் தேர்தல் வாக்குறுதியில், தன்னை சந்தித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வேலூரில் பாராளுமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார் அதன்படி தற்போது வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கதிர் ஆனந்த் தனது அலுவலகத்தை அமைத்துள்ளார் இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு தனது மகனின் அலுவலகத்தை திறந்து வைத்தார் இதற்கிடையில் பொதுவாக இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் என்பது தனியார் இடங்களில் அமைக்கப்படும் ஆனால் வேலூரில் அரசுக்குச் சொந்தமான மாநகராட்சி கட்டிடத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது நகரின் முக்கிய மைய பகுதி என்பதால் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர் இன்று அலுவலகம் திறப்பு விழாவில் திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர் இதனால் வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகம் இன்று திமுக கட்சி அலுவலகம் போல செயல்பட்டது காணும் இடங்களிலெல்லாம் கருப்பு சிகப்பு கலர் வேஷ்டி அணிந்த உடன்பிறப்புகள் அங்குமிங்கும் அலைந்தபடி நின்றனர் மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் வாழை மரங்கள் கட்டப்பட்டு தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது திமுக கொடி பொறித்த கார்கள் வந்தவண்ணம் இருந்தன இதை கவனித்த பொதுமக்கள் பாராளுமன்ற அலுவலகம் திறப்பு விழா என்ற பெயரில் மாநகராட்சி அலுவலகத்தை குத்தகை எடுத்து தனது கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார்களே என்றபடி முணுமுணுத்தனர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.