ETV Bharat / state

' பெண்கள் பணிக்குச் சென்றால் தான், எதிர்காலத்தில் சுயமாக நிற்க முடியும் ' - வேலூர் மாவட்ட ஆட்சியர்! - Vellore collector appreciated jayalalitha

வேலூர்: பெண்களின் மேம்பாட்டிற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் என பொங்கல் விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் புகழாரம் தெரிவித்தார்.

Vellore
Vellore
author img

By

Published : Jan 10, 2020, 5:09 PM IST

வேலூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் குறித்து தெரிந்து கொண்டனர். விழாவில் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், ' பெண்கள் கல்யாணம் முடிந்தவுடன் வீட்டில் இருந்து விடக்கூடாது. வேலைக்குச் சென்றால் தான் எதிர்காலத்தில் அவர்கள் சுயமாக நிற்கமுடியும். எனவே, அனைவரும் கட்டாயம் வேலைக்குச் செல்லவேண்டும்.

வேலூரில் நடைபெற்ற பொங்கல் விழா

தமிழ்நாடு அரசுப் பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக, சொத்தில் சம உரிமை பெற்று தந்தது, 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகிய திட்டங்களைக் கொண்டு உள்ளது. இதற்கு முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்' என்றார்.

இதையும் படிங்க: குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்த ஆந்திரப் பெண் - கையும் களவுமாக பிடித்த வேலூர் ஆட்சியர்

வேலூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் குறித்து தெரிந்து கொண்டனர். விழாவில் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், ' பெண்கள் கல்யாணம் முடிந்தவுடன் வீட்டில் இருந்து விடக்கூடாது. வேலைக்குச் சென்றால் தான் எதிர்காலத்தில் அவர்கள் சுயமாக நிற்கமுடியும். எனவே, அனைவரும் கட்டாயம் வேலைக்குச் செல்லவேண்டும்.

வேலூரில் நடைபெற்ற பொங்கல் விழா

தமிழ்நாடு அரசுப் பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக, சொத்தில் சம உரிமை பெற்று தந்தது, 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகிய திட்டங்களைக் கொண்டு உள்ளது. இதற்கு முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்' என்றார்.

இதையும் படிங்க: குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்த ஆந்திரப் பெண் - கையும் களவுமாக பிடித்த வேலூர் ஆட்சியர்

Intro:வேலூர் மாவட்டம்

பெண்கள் தங்கள் சுய காலில் நிற்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலிதா முக்கிய காரணம் பெண்களின் மேம்பாட்டிற்காக ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் - பொங்கல் விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் புகழாரம்Body:வேலூர் மாவட்டம் வேலூர் தனியார் கல்லூரியில் இன்று தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து பொங்கல் விழா நடத்தப்பட்டது இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வழிபாடு குறித்து தெரிந்து கொண்டனர் கல்லூரி மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர் குறிப்பாக பரதநாட்டியம் கரகாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில் மாணவிகளின் நிகழ்ச்சி ரசிக்க கூடிய வகையில் இருந்தது இந்த காலத்தில் அதுவும் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் பண்டைய காலத்தில் பெண்ணாதிக்கம் இருந்து வந்ததுஆணாதிக்கத்தை உணர்த்தும் வகையில் ஒரு அற்புதமான கவிதையை இங்கே வாசிக்கிறேன் அதில் "நீயும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் நான் நாற்காலியில் அமர்ந்து இருப்பேன் நீ அருகில் நின்று கொண்டிருப்பாய்" அதாவது கணவன் மனைவி இடையே இது ஒரு மறைமுக ஆணாதிக்கத்தை குறிப்பிடும் வகையில் உள்ளது அடுத்த வரியாக "உன் இனத்து கற்புக்கரசிகள் பெயரைச் சொல்லி உன்னை மிரட்டிய நான் என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும் அமைதியாய் இருப்பாய் நீ" என்றார் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் பெண்கள் கல்யாணம் முடிந்தவுடன் வீட்டில் இருந்து விடக்கூடாது வேலைக்கு சென்றால் தான் எதிர்காலத்தில் அவர்கள் தங்கள் சுய காலில் நிற்க முடியும் எனவே அனைவரும் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் தமிழக அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது குறிப்பாக சொத்தில் பங்கு சொத்தில் சம உரிமை மேலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு ஆகிய திட்டங்களை கொண்டு உள்ளது இதற்கு முக்கியமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் மிகச்சிறந்தது ஆரம்பத்தில் பெண்கள் கிராமங்களில் பள்ளிக்கு சென்று வர பிறரை சார்ந்து இருக்க வேண்டும் அரசு சைக்கிள் வழங்கிய பிறகு அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு சைக்கிளில் சென்று வருகின்றனர் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.