ETV Bharat / state

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல்: 179 வாக்குச்சவாடிகள் பதற்றமானவை!

author img

By

Published : Jul 23, 2019, 9:49 AM IST

Updated : Jul 23, 2019, 1:34 PM IST

வேலூர்: நடைபெறவுள்ள மக்களவை இடைத் தேர்தலில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

vellore

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்,

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 7,01351 பேரும், பெண்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேரும் உள்ளனர்.

தேர்தல் பணியில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் உள்ள 1,553 வாக்குச்சாவடிகளில் 179 பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நுண்பார்வையாளர்கள் 215 பேர் கண்காணிப்புப் பணியில் இருப்பார்கள். தேர்தலுக்காக அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்தது. வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் அலுவலர் பேட்டி

வேட்புமனுவை நேற்று மூன்று பேர் திரும்பப் பெற்றனர். இறுதியாகக் களத்தில் 28 பேர் உள்ளனர். தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி முடிந்தது. மேலும், 2,099 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மொத்தம் 75 பறக்கும்படை சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 25 ஆயிரத்து 790 ரூபாய் பணம், 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 22 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மூன்று வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்,

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 7,01351 பேரும், பெண்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேரும் உள்ளனர்.

தேர்தல் பணியில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் உள்ள 1,553 வாக்குச்சாவடிகளில் 179 பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நுண்பார்வையாளர்கள் 215 பேர் கண்காணிப்புப் பணியில் இருப்பார்கள். தேர்தலுக்காக அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்தது. வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் அலுவலர் பேட்டி

வேட்புமனுவை நேற்று மூன்று பேர் திரும்பப் பெற்றனர். இறுதியாகக் களத்தில் 28 பேர் உள்ளனர். தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி முடிந்தது. மேலும், 2,099 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மொத்தம் 75 பறக்கும்படை சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 25 ஆயிரத்து 790 ரூபாய் பணம், 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 22 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மூன்று வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் புதிய வாக்காளர்கள் 5,469 பேர் சேர்ப்பு 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் பேட்டி
Body:வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு திரும்ப பெறும் நாள் இன்றுடன் முடிந்த்து. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் இன்று நிருபர்களுகக்கு பேட்டி அளிக்கையில், " வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 7,01351 பேரும், 7,31,099 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 105 பேரும் உள்ளனர். பெண்களே அதிகம் பேர உள்ளனர். தேர்தல் பணியில் மொத்தம் 7552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. மொத்தம் உள்ள 1553 வாக்குச்சாவடியில் 179 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது் அங்கு நுண்பார்வையாளர்கள் 215 பேர் கண்காணிப்பார்கள். தேர்தலுக்காக அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்த்து. வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
வேட்புமனு இன்று 3 பேர் திரும்ப பெற்றனர் இறுதியாக களத்தில் 28 பேர் உள்ளனர். சின்னம் ஒதுக்கும் பணி முடிந்த்து. யாருக்கும் வாக்களித்தோம் என்பதை அறிய 2099 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மொத்தம் 75 பறக்கும்படை 3 ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 25 ஆயிரத்து 790 ரூபாய் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளோம். 22 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 3 வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்Conclusion:
Last Updated : Jul 23, 2019, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.