வேலூர் மாவட்டம், காட்பாடி-சித்தூர் செல்லும் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, காட்பாடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காட்பாடி காவல்துறையினர், சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சாலையோரம் இறந்து கிடந்தவர் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிவப்பு, க்ரே, வெள்ளை.. அடுத்தடுத்து மோதிய கார்களால் ஒருவர் உயிரிழப்பு..