ETV Bharat / state

மருத்துவர்களின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுவன் பலி! - மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில்

வேலூர்: மருத்துவர்களின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுவன் உயிரிழந்ததால் உறவினர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Relatives
author img

By

Published : Sep 23, 2019, 11:35 PM IST

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்திரபள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிலட்சுமி. இவர்களுக்கு கபில்(3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கால், தலையில் பிரச்னை இருந்ததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தைக்கு தலையில் நீர் கோர்த்து உள்ளதாகவும் அந்த நீரை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையைக் கடந்த 19ஆம் தேதி புகழ்பெற்ற சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பழனியால் சிகிச்சைக்கு தேவையான பணத்தை உடனடியாக செலுத்த முடியவில்லை. இதனால் கபிலுக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர்கள் பணத்தை தயார் செய்து கட்டியதும் சிகிச்சை தொடரப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இன்று உயிரிழந்தான்.

அலட்சியத்தால் மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு, மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மறியல்

பணத்தை காரணம் காட்டி மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், குழந்தையின் உறவினர்கள் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்திரபள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிலட்சுமி. இவர்களுக்கு கபில்(3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கால், தலையில் பிரச்னை இருந்ததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தைக்கு தலையில் நீர் கோர்த்து உள்ளதாகவும் அந்த நீரை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையைக் கடந்த 19ஆம் தேதி புகழ்பெற்ற சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பழனியால் சிகிச்சைக்கு தேவையான பணத்தை உடனடியாக செலுத்த முடியவில்லை. இதனால் கபிலுக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர்கள் பணத்தை தயார் செய்து கட்டியதும் சிகிச்சை தொடரப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இன்று உயிரிழந்தான்.

அலட்சியத்தால் மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு, மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மறியல்

பணத்தை காரணம் காட்டி மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், குழந்தையின் உறவினர்கள் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் பரிதாப பலி? உறவினர்கள் பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்புBody:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்திரபள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி பழனி லட்சுமி. இவர்களுக்கு கபில் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது இந்த குழந்தைக்கு கால் மற்றும் தலையில் பிரச்சனை இருந்துள்ளது மதுரையில் ஒரு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டபோது குழந்தைக்கு தலையில் நீர் கோர்த்து உள்ளதாகவும் அந்த நீரை அகற்றி விட்டால் குழந்தை சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கின்றனர் இதனடிப்படையில் கடந்த 19ஆம் தேதி அன்று வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையான சிஎம்சி மருத்துவமனையில் கபில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இந்த நிலையில், சிகிச்சைக்கு தேவையான பணத்தை பழனியால் உடனடியாக செலுத்த முடியவில்லை. இதனால் கபிலுக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர்கள் பணத்தை தயார் செய்து கட்டிய பின்பு சிகிச்சை தொடரப்பட்டது எனினும் சிகிச்சை பலனின்றி கபில் பரிதாபமாக இன்று உயிரிழந்தான். பணத்தை காரணம் காட்டி மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் தான் தன் மகன் இறந்தான் என்று கூறி சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் டாக்டர்களை கண்டித்தும் வேலூர் காட்பாடி சாலையில் சிஎம்சி அவுட் கேட் பகுதியில் கபில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. விலைமதிப்பில்லா உயிரை காப்பாற்ற, பணத்தை எதிர்நோக்கியதன் விளைவாக அப்பாவி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகம் ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

Vellore
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.