ETV Bharat / state

வடிவேலுவின் 'சீப்பு காமெடி' போல் வேலூர் தேர்தலை நிறுத்த முயற்சி! - Theft incident

வேலூர்: வாக்குச்சாவடியில் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, 11 கணினிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

vellore
author img

By

Published : Aug 4, 2019, 2:42 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மையங்களில் 30ஆவது வாக்குச்சாவடி மையம் உள்ளது.

இந்த வாக்குச் சாவடி மையம் உள்ள பள்ளி வகுப்பறையில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவையும் பள்ளியிலிருந்த 11 கணினிகளையும் திருடிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை கிராம நிர்வாக பணியாளர் பள்ளியை வந்து பார்த்தபோது சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா, கணினிகள் திருட்டு
இது குறித்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் நடைபெறவுள்ள நிலையில் வாக்குச் சாவடியில் வைக்கப்பட்ட கேமரா, கணினிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சீப்பை திருடிவிட்டோம்... சீப்பில்லாமல் மாப்பிள்ளை எப்படி தலைவாருவாரு; எப்படி தாலி கட்டுவாரு" என்ற வைகைப்புயல் வடிவேலுவின் இங்கிலீஸ்காரன் படத்தைப் போல... 'கேமராவையும் கணினியையும் திருடிவிட்டோம்; இனி எப்படி தேர்தல் நடக்கும்' என்பதைப் போல் இச்சம்பவம் உள்ளதாக வேலூர் மக்கள் நகைச்சுவையாக பேசிவருகின்றனர்.

வேலூர் மக்களவைத் தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மையங்களில் 30ஆவது வாக்குச்சாவடி மையம் உள்ளது.

இந்த வாக்குச் சாவடி மையம் உள்ள பள்ளி வகுப்பறையில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவையும் பள்ளியிலிருந்த 11 கணினிகளையும் திருடிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை கிராம நிர்வாக பணியாளர் பள்ளியை வந்து பார்த்தபோது சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா, கணினிகள் திருட்டு
இது குறித்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் நடைபெறவுள்ள நிலையில் வாக்குச் சாவடியில் வைக்கப்பட்ட கேமரா, கணினிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சீப்பை திருடிவிட்டோம்... சீப்பில்லாமல் மாப்பிள்ளை எப்படி தலைவாருவாரு; எப்படி தாலி கட்டுவாரு" என்ற வைகைப்புயல் வடிவேலுவின் இங்கிலீஸ்காரன் படத்தைப் போல... 'கேமராவையும் கணினியையும் திருடிவிட்டோம்; இனி எப்படி தேர்தல் நடக்கும்' என்பதைப் போல் இச்சம்பவம் உள்ளதாக வேலூர் மக்கள் நகைச்சுவையாக பேசிவருகின்றனர்.
Intro:வடிவேல் காமெடியில் சீப்பை திருடிவிட்டேன் இனி எப்படி கல்யாணம் நடக்கும் என்பதை போல்...வெப் கேமராவையும், கம்ப்யூட்டரையும் திருடிவிட்டேன் இனி எப்படி தேர்தல் நடக்கும்..

வேலூரில் வாக்குச்சாவடியில் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் 11 கம்ப்யூட்டர்களும் திருட்டு போலீசார் விசாரணை
Body:வேலூர் பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது இதனிடையே குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கே வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 29. 30.32 ஆகிய வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இதில் 30 வது வாக்கு சாவடி பள்ளி வகுப்பறையில் நேற்று நள்ளிரவு பூட்டை உடைந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த 1 சிசிடிவி கேமரா திருடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் இருந்த 11 கணணிகளும் திருடப்பட்டுள்ளது. இன்று கிராம நிர்வாக பணியாளர் வந்து பார்த்த பொழுது சிசிடிவி கேமரா மற்றும் கணினிகள் திருடபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடியாத்தம் காவல்துறையினர் இது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேர்தல் பணிக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் பள்ளியில் இருந்த பதினொரு கம்ப்யூட்டர்களும் திருடபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலூம் இந்த சம்பவத்தை பார்க்கும்போது, வடிவேல் காமெடி ஒன்றில், சத்யராஜ் கல்யாணத்தை நிறுத்த வடிவேல் பல முயற்சி எடுப்பார். அப்போது வடிவேலுடன் நடித்த காமெடியர் போண்டா மணி, தலை வார பயன்படும் சீப்பை திருடிவிட்டு வடிவேலை பார்த்து, அண்ணே மாப்பிள்ளை சீப்பை திருடிவிட்டு இனி எப்படி கல்யாணம் நடக்கும் என்பார். அதேபோல் ஏற்கனவே வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தேர்தல் நடைபெற நிலையில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்ட கேமரா கம்ப்யூட்டர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேமராவையும் கம்பயூட்டரையும் திருடிவிட்டோம் இனி எப்படி தேர்தல் நடக்கும் என்பதை போல் உள்ளதாக வேலூர் மக்கள் காமெடியாக பேசி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.