ETV Bharat / state

வேலூர் தொகுதியில் போட்டியிட 50 வேட்புமனுக்கள் தாக்கல்!

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் 45 பேர் 50 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

author img

By

Published : Jul 18, 2019, 6:24 PM IST

The Vellore batch filed today

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவித்தது. அதன்படி வரும் ஆக.5 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்த முறையும் அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேலூர் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் மனுதாக்கல் செய்தனர். குறிப்பாக பலர் வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடியும், ஆவி போன்று உடை அணிந்த படியும், கழுத்தில் கொய்யாப்பழம் மாலை அணிந்த படியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

இந்த நிலையில் வேலூர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 45 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிட 50 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் அடுத்தக்கட்டமாக பரப்புரையில் கவனம் செலுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வேலூர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவித்தது. அதன்படி வரும் ஆக.5 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்த முறையும் அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேலூர் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் மனுதாக்கல் செய்தனர். குறிப்பாக பலர் வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடியும், ஆவி போன்று உடை அணிந்த படியும், கழுத்தில் கொய்யாப்பழம் மாலை அணிந்த படியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

இந்த நிலையில் வேலூர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 45 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிட 50 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் அடுத்தக்கட்டமாக பரப்புரையில் கவனம் செலுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வேலூர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Intro:வேலூர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது - இதில் 45 பேர் 50 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை Body:நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பின்னர் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவித்தது அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது இந்த முறை அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார் அதேபோல் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார் ஏ சி சண்முகம் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே தனது மனுவை தாக்கல் செய்தார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேலூர் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர் குறிப்பாக பலர் வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடியும் ஆவி போன்று உடை அணிந்த படியும் கழுத்தில் கொய்யாப்பழம் மாலை அணிந்த படியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர் இந்த நிலையில் வேலூர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது மொத்தம் 45 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிட 50 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு 22ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக பிரச்சாரத்தில் கவனம் செலுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர் எனவே வேலூர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.