வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, காட்பாடியில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் எழுதுபொருள் விற்கும் கடை நடத்திவருகிறர். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், இன்று வந்து பார்க்கும் போது கடையின் முன்பு வைத்திருந்து டேபிள் மற்றும் நாற்காலி திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கடையின் முன்புறம் இருந்த டேபிள் மற்றும் நாற்காலியை அடையாளம் தெரியாத நபர் எடுத்து செல்லும் செல்லும் காட்சி பதிவாகியுள்து. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காட்பாடி காவலர்கள், சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை? - உயர் நீதிமன்றம் கேள்வி