ETV Bharat / state

குடிநீர் வழங்காததைக் கண்டித்து குடங்களுடன் சாலை மறியல்! - ராணிப்பேட்டை செய்திகள்

வேலூர்: ராணிப்பேட்டையில் முறையாகக் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

raanipettai
raanipettai
author img

By

Published : Dec 13, 2019, 10:41 AM IST

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதமாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முழுமையாக தண்ணீர் வரவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடங்களுடன் சாலை மறியல்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்தையில், அலுவலர்களுடன் சமரசத்தை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாலை, சாக்கடை வசதி இல்லை- உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு!

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதமாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முழுமையாக தண்ணீர் வரவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடங்களுடன் சாலை மறியல்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்தையில், அலுவலர்களுடன் சமரசத்தை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாலை, சாக்கடை வசதி இல்லை- உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு!

Intro:ராணிப்பேட்டை மாவட்டம்

முறையாக குடி நீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் காலி குடங்களுடன் சாலையை மறித்து போராட்டம் Body:ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட நேருநகர் மற்றும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதமாக முறையாக தண்ணீர் விணியோகம் செய்யப்படவில்லை எனவும் கடந்த ஒரு மாதமாக முழுமையாக தண்ணீர் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்து புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் இரு வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்ற பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.