ETV Bharat / state

தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு!

வேலூர்: ஆட்டோவில் தவறவிட்ட 5 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஓட்டுநருக்கு பாராட்டு
author img

By

Published : Jun 18, 2019, 12:31 PM IST

Updated : Jun 18, 2019, 12:40 PM IST

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த காரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சிவா, மீனா ஆகியோர் சென்னை சென்றுவிட்டு கடந்த 15ஆம் தேதி காலை ஊருக்கு வந்திருக்கின்றனர். முத்துகடையிலிருந்து காரை செல்வதற்காக அருகிலிருந்த தினகரன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது மீனா அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலி தவறி ஆட்டோவில் விழுந்துள்ளது.

இதை கவனிக்காத தம்பதியினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ஆட்டோவை துடைக்கும்போது தங்க நகை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் தினகரன் உடனடியாக அந்த நகையை ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

வறுமையான சூழலில் ஆட்டோ ஓட்டிவரும் தினகரன் தனது வண்டியில் கிடந்த தங்க நகையை சுயநலம் பாராது காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவரை கௌரவப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.


.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த காரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சிவா, மீனா ஆகியோர் சென்னை சென்றுவிட்டு கடந்த 15ஆம் தேதி காலை ஊருக்கு வந்திருக்கின்றனர். முத்துகடையிலிருந்து காரை செல்வதற்காக அருகிலிருந்த தினகரன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது மீனா அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலி தவறி ஆட்டோவில் விழுந்துள்ளது.

இதை கவனிக்காத தம்பதியினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ஆட்டோவை துடைக்கும்போது தங்க நகை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் தினகரன் உடனடியாக அந்த நகையை ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

வறுமையான சூழலில் ஆட்டோ ஓட்டிவரும் தினகரன் தனது வண்டியில் கிடந்த தங்க நகையை சுயநலம் பாராது காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவரை கௌரவப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.


.

Intro:ஆட்டோவில் தவறவிட்ட 5 சவரன் தங்க நகையை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு


Body:வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சிவா, மீனா ஆகியோர் சென்னை சென்று விட்டு கடந்த 15ம் தேதி காலை ஊருக்கு வந்துள்ளனர் அப்போது முத்து கடையிலிருந்து காரை செல்வதற்காக அருகிலிருந்த தினகரன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர் அப்போது மீனா அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலி தவறி ஆட்டோவில் விந்துள்ளது. இதை கவனிக்காமல் தம்பதியினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ஆட்டோவை துடைக்கும் போது தங்க நகை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் தினகரன் உடனடியாக அந்த நகையை ராணிப்பேட்டை காவல் துறையிடம் ஒப்படைத்தார் வறுமையான சூழலில் ஆட்டோ ஓட்டி வரும் தினகரன் தனது வண்டியில் கிடந்த தங்க நகையை சுயநலம் பாராது காவல்துறையிடம் கொடுத்த சம்பவம் பாராட்டு ஏற்படுத்தி கொடுத்தது இந்த நிலையில் வறுமையிலும் நேர்மை தவறாது நடந்து கொண்ட ஆட்டோ டிரைவரை கௌரவப்படுத்தும் விதமாக இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த ஆட்டோ டிரைவரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தினகரனுக்கு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் இச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது


Conclusion:
Last Updated : Jun 18, 2019, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.