ETV Bharat / state

அனுமதியின்றி செயல்பட்டு வந்த 29 குடிநீர் ஆலைகளுக்கு சீல்!

author img

By

Published : Mar 2, 2020, 7:44 AM IST

வேலூர்: அனுமதியின்றி செயல்பட்டு வந்த 29 குடிநீர் ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.

அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்
அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்

தமிழ்நாடு முழுவதும் வணிக நோக்கத்திற்காக உரிய அனுமதியின்றி பல்வேறு குடிநீர் ஆலைகள் செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 40 குடிநீர் ஆலைகளில் 37 குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது. இவைகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து பேர்ணாம்பட், குடியாத்தம், வேலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 29 ஆலைகளுக்கு நேற்று ஒரே நாளில் குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் இணைந்து சீல் வைத்தனர்.

அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்

மீதமுள்ள ஆலைகளுக்கு இன்று சீல் வைக்கும் பணி தொடரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 40 குடிநீர் ஆலைகள் உள்ள நிலையில் இதில் மூன்று ஆலைகள் மட்டுமே உரிய அனுமதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

தமிழ்நாடு முழுவதும் வணிக நோக்கத்திற்காக உரிய அனுமதியின்றி பல்வேறு குடிநீர் ஆலைகள் செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 40 குடிநீர் ஆலைகளில் 37 குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது. இவைகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து பேர்ணாம்பட், குடியாத்தம், வேலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 29 ஆலைகளுக்கு நேற்று ஒரே நாளில் குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் இணைந்து சீல் வைத்தனர்.

அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்

மீதமுள்ள ஆலைகளுக்கு இன்று சீல் வைக்கும் பணி தொடரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 40 குடிநீர் ஆலைகள் உள்ள நிலையில் இதில் மூன்று ஆலைகள் மட்டுமே உரிய அனுமதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.