ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

author img

By

Published : Oct 21, 2019, 11:54 AM IST

வேலூர்: திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள், 65 ஆயிரம் ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பூட்டிய வீட்டை திறந்து 14 சவரன் தங்க நகை கொள்ளை!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், துரைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னகேசவலு, லட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினரின் வீட்டு விழாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் அருண்குமார் என்பவர், எதேச்சையாக கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னகேசவலுவுடன் திருப்பத்தூர் நகர காவல் துறையினரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளையும், 65 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

தத்துவாஞ்சேரி ஜாமிஆ பள்ளிவாசல் கொள்ளை - காவல் துறை வலைவீச்சு!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், துரைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னகேசவலு, லட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினரின் வீட்டு விழாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் அருண்குமார் என்பவர், எதேச்சையாக கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னகேசவலுவுடன் திருப்பத்தூர் நகர காவல் துறையினரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளையும், 65 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

தத்துவாஞ்சேரி ஜாமிஆ பள்ளிவாசல் கொள்ளை - காவல் துறை வலைவீச்சு!

Intro:திருப்பத்தூர் அருகே பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகை மற்றும் 65 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை நகர போலீசார் விசாரணைBody:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் துரை நகர் பகுதியை சேர்ந்த சென்னகேசவலு இவரது மனைவி லட்சுமி இவரது அக்கா மகள் குழந்தைக்கு தொட்டில் போடுவதற்காக உறவினர் வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் இந்நிலையில் சென்னகேசவலு இவரது வீட்டின் மேல் தளத்தை குடியிருக்கும் அருண்குமார் என்பவர் கீழே இறங்கி வந்து பார்க்கும் பொழுது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போய் செண்ணகேசவலுக்கு தகவல் தெரிவித்தனர் செண்ணகேசவலு வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது மர்மநபர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் 65 ஆயிரம் ரொக்கப்பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதைக்குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.