வேலூர்: வேலூர் அருகே காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(40). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றினார்.
இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த காவலர், குடும்பத் தகராறு காரணமாக நேற்று (ஜூலை 25) தற்கொலை செய்து கொண்டார்.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12578135_police1.jpg)
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியூர் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
![உயிரிழந்த காவலர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12578135_police2.jpg)
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் கஞ்சா விற்பனையாளராக மாறிய கார் ஓட்டுநர் கைது