ETV Bharat / state

ஆம்பூர் அருகே இளம்பெண் அடித்துக் கொலை - காவல் துறை விசாரணை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

author img

By

Published : Dec 19, 2019, 11:12 PM IST

ஆம்பூர் அருகே இளம்பெண் அடித்து கொலை
ஆம்பூர் அருகே இளம்பெண் அடித்து கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (22). தாய், தந்தையை இழந்த இவர் தனது சித்தப்பா செல்வம், சித்தி சித்ரா வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், ரேவதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவருடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

பின்னர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரேவதியின் சித்தப்பா செல்வம் மீண்டும் ரேவதிக்கு மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துள்ளார். மகேஸ்வரனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுவிட்டார்.

ரேவதி, சித்தப்பா வீட்டில் வசித்துவந்த நிலையில் பெங்களூருவிலிருந்து மகேஸ்வரன் நேற்று இரவு ரேவதியிடம் செல்போனில் பேசியுள்ளார். வீட்டில் சிக்னல் கிடைக்காததால் அவர் அருகில் உள்ள சுட்டகுண்டா மலைப்பகுதி முன்பு நின்று பேசியுள்ளார்.

இதனையடுத்து நீண்டநேரமாகியும் ரேவதி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த செல்வம் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காலையில் சுட்டகுண்டா மலைப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாகக் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (22). தாய், தந்தையை இழந்த இவர் தனது சித்தப்பா செல்வம், சித்தி சித்ரா வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், ரேவதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவருடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

பின்னர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரேவதியின் சித்தப்பா செல்வம் மீண்டும் ரேவதிக்கு மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துள்ளார். மகேஸ்வரனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுவிட்டார்.

ரேவதி, சித்தப்பா வீட்டில் வசித்துவந்த நிலையில் பெங்களூருவிலிருந்து மகேஸ்வரன் நேற்று இரவு ரேவதியிடம் செல்போனில் பேசியுள்ளார். வீட்டில் சிக்னல் கிடைக்காததால் அவர் அருகில் உள்ள சுட்டகுண்டா மலைப்பகுதி முன்பு நின்று பேசியுள்ளார்.

இதனையடுத்து நீண்டநேரமாகியும் ரேவதி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த செல்வம் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காலையில் சுட்டகுண்டா மலைப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாகக் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை

Intro:ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டா மலைப்பகுதியில் இளம்பெண் அடித்து கொலை;Body:



திருப்பத்தூர்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ரேவதி(22) .. தாய் தந்தையை இழந்த இவர் தனது சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறார்...

இந்நிலையில் இவரது உறவினர்கள் ரேவதியிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.... இந்நிலையில் திருமணமாகி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து ஏற்பட்டுள்ளது...

இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உறவினர்கள் மீண்டும் ரேவதியிற்கு மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்...

இந்த நிலையில் ரேவதியின் கணவர் பெங்களூரில் பணிபுரிவதற்காக சென்றுள்ளார்... இதனால் ரேவதி சுட்டகுண்டாவில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்....

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ரேவதியின் கணவர் தொலைபோசியில் அழைப்பு விடுத்துள்ளார்...

தொலைபேசியில் அழைப்பு வந்ததால் வீட்டினுள் சிக்னல் கிடைக்காததால் பேசுவதற்காக வீட்டிற்கு வெளியில் வந்த ரேவதி அங்கும் சரியாக சிக்னல் கிடைக்காததால் வீட்டை வீட்டு சற்று தூரம் மலைப்பகுதியில் சென்று பேசிக்கொண்டிருந்துள்ளார்..

நீண்ட நேரமாகியும் ரேவதி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்...

நேற்று இரவு முழுவதும் பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில்...

இதனை தொடர்ந்து இன்று காலை அங்குள்ள மலைப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் ரேவதி தலையில் பலத்த காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக ரேவதியின்
சித்தப்பாவிடம் தெரிவித்துள்ளனர்...

மேலும் இதுகுறித்து சுட்டகுண்டா கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தெரிவிக்கப்பட்டபின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில்,,

ரேவதி விவாகரத்து ஆன பின்னர் போடி பேட்டை பகுதியை சேர்ந்த ரேவதியின் சித்தியின் உறவினர்கள் ரேவதியை பெண் கேட்டுள்ளனர் ஆனால் ரேவதியின் சித்தப்பா பெண் கொடுக்க மறுத்துள்ளார்...

இதனால் ரேவதியின் சித்தி சித்ராவிற்கு ரேவதியின் மீது ஆத்திரம் ஏற்ப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்...





இதனால் சித்ரா ஆத்திரத்தினால் ரேவதியை ஆட்கள் வைத்து கொலை செய்தாரா அல்லது மலைப்பகுதியில் தனியாக இருந்த பெண்ணிடம் அவ்வழியாக சென்றவர்கள் ரேவதியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....



மேலும் தமிழக ஆந்திர எல்லையில் கடந்த ஓரு வருடங்களுக்கு முன் பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு கணவனும் தூக்கில் அங்குள்ள மலைப்பகுதியில் தூக்கில் தொங்கிய சம்பவத்தை தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்......Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.