ETV Bharat / state

ஸ்கார்பியோ காரில் செம்மரம் வெட்டச் சென்ற ஏழு பேர் கைது!

வேலூர்: ஆந்திர மாநிலத்தின் எல்லைப்பகுதியான காட்பாடியில் செம்மரம் வெட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த ஏழு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Jun 30, 2019, 12:16 PM IST

செம்மரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கல் புதூரில் காட்பாடி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை மடக்கி சோதனையிட்டதில், காரில் இருந்தவர்கள் ஆந்திராவிற்குச் சென்று செம்மரக் கட்டை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காரில் இருந்த வெங்கடேசன்(32), ராதாகிருஷ்ணன்(28), ஐயப்பன்(28), நாகராஜ்(33) கோவிந்தராஜ்(27), ஏகாம்பரம்(30), பிரகாஷ்(28) ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கல் புதூரில் காட்பாடி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை மடக்கி சோதனையிட்டதில், காரில் இருந்தவர்கள் ஆந்திராவிற்குச் சென்று செம்மரக் கட்டை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காரில் இருந்த வெங்கடேசன்(32), ராதாகிருஷ்ணன்(28), ஐயப்பன்(28), நாகராஜ்(33) கோவிந்தராஜ்(27), ஏகாம்பரம்(30), பிரகாஷ்(28) ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Intro:வேலூர் மாவட்டம்

காட்பாடி அருகே ஆந்திரா எல்லையில் ஆயுதங்களுடன் காரில் வந்த 7 பேர் கைது - செம்மரக்கட்டை வெட்ட சென்றார்களா? காவல்துறையினர் விசாரணைBody:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் இன்று காட்பாடி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் ஆந்திரா எல்லை அருகே உள்ள இந்த இந்த பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கி சோதனையிட்டனர் அப்போது அதில் இருந்த நபர்கள் காவல் துறையினரின் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர் இதையடுத்து அந்த காரை சோதனையிட்டபோது உள்ளே கத்தி மற்றும் மரம் வெட்ட பயன்படுத்தப்படும் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது இதையடுத்து அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் காரில் இருந்த வெங்கடேசன்(32) ராதாகிருஷ்ணன்(28) ஐயப்பன்(28) நாகராஜ்(33) கோவிந்தராஜ்(27) ஏகாம்பரம்(30) பிரகாஷ்(28) ஆகிய 7 பேரை கைது செய்தனர் இவர்கள் ஆந்திரா மாநில காட்டுப் பகுதிக்குள் சென்று செம்மரம் கட்டை வெட்டி வருவதற்காக ஆயுதங்களுடன் காரில் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக காட்பாடி காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை தொடர்ந்து 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.