ETV Bharat / state

கார் மோதி விபத்து: கூலித் தொழிலாளி பலி!

வேலூர்: சோளிங்கர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளி பலி
author img

By

Published : Jun 18, 2019, 11:47 AM IST

சோளிங்கர் அடுத்த பகுதியில் கார் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, அந்த வழியாக சோளிங்கர் எல்.என்.கண்டிகையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன்(30) தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரின் இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கூலித் தொழிலாளி பலி

இதைக் கண்டதும் காரில் வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்கே பேட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டியவர் வேலூரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரின் உறவினர் என்பதும், அவர் பெயர் வினோத் என்பதும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய வினோத்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சோளிங்கர் அடுத்த பகுதியில் கார் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, அந்த வழியாக சோளிங்கர் எல்.என்.கண்டிகையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன்(30) தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரின் இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கூலித் தொழிலாளி பலி

இதைக் கண்டதும் காரில் வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்கே பேட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டியவர் வேலூரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரின் உறவினர் என்பதும், அவர் பெயர் வினோத் என்பதும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய வினோத்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Intro:வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலி


Body:வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பகுதியில் இன்று கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது அப்போது அந்த வழியாக சோளிங்கர் எல்.என்.கண்டிகையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(30) தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் திடீரென எதிர்பாராதவிதமாக சரவணன் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதை கண்டதும் காரில் இருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்கே பேட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர் வேலூரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரின் உறவினர் என்பதும் அவரது பெயர் வினோத் என்பதும் தெரியவந்துள்ளது தப்பி ஓடிய வினோத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.