ETV Bharat / state

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - அமைச்சர் பெருமிதம்! - minister nilofer kafeel

வேலூர்: கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால் ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு என வாணியம்பாடியில் அமைச்சர் நீலோபர் கபீல் பெருமிதம் தெரிவித்தார்.

Minister nilofer kafeel
author img

By

Published : Oct 1, 2019, 11:25 PM IST

வாணியம்பாடியில் தனியார் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் 1757 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

அதில், ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்ட உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்கினார். தற்போது அதே வழியில் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர், பணியின் போது இறந்தால் மட்டும் அல்ல, அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று சில நாட்கள் கழித்து மரணம் ஏற்பட்டாலும் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கட்டுமானத் தொழிலாளர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க: மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் வௌவால்கள் நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலா?

வாணியம்பாடியில் தனியார் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் 1757 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

அதில், ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்ட உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்கினார். தற்போது அதே வழியில் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர், பணியின் போது இறந்தால் மட்டும் அல்ல, அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று சில நாட்கள் கழித்து மரணம் ஏற்பட்டாலும் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கட்டுமானத் தொழிலாளர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க: மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் வௌவால்கள் நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலா?

Intro:கட்டுமான தொழிலாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால் ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு ; வாணியம்பாடியில் அமைச்சர் நீலோபர் கபீல் பெருமிதம் ;
Body:









வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் கட்டுமான 1757 தொழிலாளர்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து

கொண்டு பயணாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசுகையில் ;

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தை உருவாக்கி அதன் பிறகுதான் படிப்படியாக 17 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டது என்பதைத் தெரிவித்த அவர் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தால் விபத்து மரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை ,திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கட்டுமான தொழிலாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்ட உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்கினார் தற்போது அதே வழியில் ஆட்சி நடத்திவரும் முதல்வர் அவர்கள் பணியின் போது இறந்தால் மட்டும் இல்லை அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சில நாட்கள் கழித்து மரணம் ஏற்பட்டாலும் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார் மேலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வரும் திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தாலும் அவர்களுக்கு 4 லட்சம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்த அவர் கட்டுமான தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கட்டுமான தொழிலாளர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையானது 20 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.