ETV Bharat / state

அதிமுக அமைச்சர் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவருக்குக் கொலை மிரட்டல்! - அஸ்லாம் பாஷாவுக்கு கொலை மிரட்டல்

திருப்பத்தூர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷாவுக்கு அலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர் பற்றி பேசிய காங்கிரஸ் சிறுபான்மை தலைவருக்கு கொலை மிரட்டல்!
அஸ்லாம் பாஷா
author img

By

Published : Dec 29, 2019, 1:49 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 135ஆவது காங்கிரஸ் நிறுவனர் நாளை முன்னிட்டு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி வணக்கம் செய்து இனிப்புகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாக படிக்கவில்லை எனக் கூறி, அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை அஞ்சல் மூலம் அனுப்பினார்.

இதையடுத்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அஸ்லாம் பாஷாவுக்கு அலைபேசி மூலமாக கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை நிர்வாகிகள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவரது வீட்டிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஸ்லாம் பாஷா பேட்டி

இதையும் படியுங்க: ’பிரதமர் உரையை வீட்டிலிருந்து கேட்கலாம்’ - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 135ஆவது காங்கிரஸ் நிறுவனர் நாளை முன்னிட்டு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி வணக்கம் செய்து இனிப்புகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாக படிக்கவில்லை எனக் கூறி, அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை அஞ்சல் மூலம் அனுப்பினார்.

இதையடுத்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அஸ்லாம் பாஷாவுக்கு அலைபேசி மூலமாக கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை நிர்வாகிகள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவரது வீட்டிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஸ்லாம் பாஷா பேட்டி

இதையும் படியுங்க: ’பிரதமர் உரையை வீட்டிலிருந்து கேட்கலாம்’ - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லாம் பாஷா வுக்கு அலைபேசி மூலம் கொலை மிரட்டல்
Body:


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 135 வது காங்கிரஸ் நிறுவன நாளை முன்னிட்டு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொடி வணக்கம் செய்து இனிப்புகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து



அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா சரியாக படிக்கவில்லை என கூறி அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை அஞ்சல் மூலம் அனுப்பினார்

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில்



தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்திருந்தார்

அதன் அடிப்படையில் அலைப்பேசி மூலமாக அஸ்லாம் பாஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை நிர்வாகிகள் புகார் கொடுத்தனர்



இதனால் அவரது வீட்டிற்க்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இதனால் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.