ETV Bharat / state

சத்துணவுத் திட்டத்தை பிச்சையெடுப்பதோடு ஒப்பிட்ட கருணாநிதி - நினைவுகூரும் கே.பி. முனுசாமி

author img

By

Published : Oct 2, 2021, 11:39 AM IST

காட்பாடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட கே.பி. முனுசாமி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து பொய் கூறியே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது எனப் பேசினார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி  கே.பி.முனுசாமி பரப்புரை  வேலூரில் கே.பி.முனுசாமி பரப்புரை  திமுக்வை விமர்சித்த கே.பி.முனுசாமி  வேலூர் செய்திகள்  vellore news  vellore latest news  kp munusamy  kp munusamy criticize dmk  local body elecition  elecition campaign  campaign  local body elecition campaign of kp munusamy
கே.பி.முனுசாமி

வேலூர்: காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (அக்டோபர் 1) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.

அதில் பேசிய கே.பி. முனுசாமி, “'ஆளும் கட்சியான எங்களுக்கு வாக்களித்தால்தான் நல்லது செய்ய முடியும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்தால் பணி செய்யவிட மாட்டோம்' எனத் திமுகவினர் கூறிவருகின்றனர். திமுகவைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து பொய் கூறியே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தற்போதும் அந்த வகையிலேயே வாக்கு கேட்டுவருகிறார்கள்.

வாக்குறுதிக்குப் பதில் சாக்கு சொல்லும் திமுக

100 நாள் வேலை 150 நாள்கள் ஆக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள் 100 நாள் வேலையை 150 நாள் ஆக்குவது குறித்து ஒன்றிய அரசை அனுகுவோம் எனப் பழிபோடுகிறார்கள்.

காட்பாடியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு கூட்டுறவுச் சங்கங்களைக் களைத்துவிட்டு திமுகவினரை நியமிக்க இருக்கிறோம் எனக் கூறினார். இது எப்படிப்பட்ட கொடுமை.

துரைமுருகன் தொடர்ந்து அவதூறாகவே பேசிவருகிறார். திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக சாக்கு சொல்லிவருகிறார்கள். தமிழ்நாட்டுக்கும் முதன் முதலில் போர்வெல்லை (ஆழ்துளை கிணறு) அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர்.

சத்துணவுத் திட்டத்தை விமர்சித்த கருணாநிதி

அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, மாணவர்களை எம்ஜிஆர் பிச்சை எடுக்கவைப்பதாக கருணாநிதி விமர்சித்தார்.

பின்னாளில் அவர்தான், அந்தத் திட்டத்திற்கு மக்களிடத்தில் இருந்த வரவேற்பைப் பார்த்து, 'நான் ஆட்சிக்கு வந்தால் முட்டை போடுவேன்' எனக் கூறி முட்டை போட்டார். திமுகவினர் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வந்தால் அடாவடித்தனம் செய்வார்கள்” என்றார்.

இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

வேலூர்: காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (அக்டோபர் 1) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.

அதில் பேசிய கே.பி. முனுசாமி, “'ஆளும் கட்சியான எங்களுக்கு வாக்களித்தால்தான் நல்லது செய்ய முடியும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்தால் பணி செய்யவிட மாட்டோம்' எனத் திமுகவினர் கூறிவருகின்றனர். திமுகவைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து பொய் கூறியே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தற்போதும் அந்த வகையிலேயே வாக்கு கேட்டுவருகிறார்கள்.

வாக்குறுதிக்குப் பதில் சாக்கு சொல்லும் திமுக

100 நாள் வேலை 150 நாள்கள் ஆக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள் 100 நாள் வேலையை 150 நாள் ஆக்குவது குறித்து ஒன்றிய அரசை அனுகுவோம் எனப் பழிபோடுகிறார்கள்.

காட்பாடியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு கூட்டுறவுச் சங்கங்களைக் களைத்துவிட்டு திமுகவினரை நியமிக்க இருக்கிறோம் எனக் கூறினார். இது எப்படிப்பட்ட கொடுமை.

துரைமுருகன் தொடர்ந்து அவதூறாகவே பேசிவருகிறார். திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக சாக்கு சொல்லிவருகிறார்கள். தமிழ்நாட்டுக்கும் முதன் முதலில் போர்வெல்லை (ஆழ்துளை கிணறு) அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர்.

சத்துணவுத் திட்டத்தை விமர்சித்த கருணாநிதி

அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, மாணவர்களை எம்ஜிஆர் பிச்சை எடுக்கவைப்பதாக கருணாநிதி விமர்சித்தார்.

பின்னாளில் அவர்தான், அந்தத் திட்டத்திற்கு மக்களிடத்தில் இருந்த வரவேற்பைப் பார்த்து, 'நான் ஆட்சிக்கு வந்தால் முட்டை போடுவேன்' எனக் கூறி முட்டை போட்டார். திமுகவினர் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வந்தால் அடாவடித்தனம் செய்வார்கள்” என்றார்.

இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.