ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்- துரைமுருகன் வீட்டில் கோலம் - DMK Duraimurugan's HOUSE KOLAM

வேலூர்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் கோலம் வரையப்பட்டுள்ளது.

KOLAM at Duraimurugan's HOUSE against CAA
KOLAM at Duraimurugan's HOUSE against CAA
author img

By

Published : Dec 31, 2019, 5:34 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சியினரும் மாணவர்களும் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை பெசன்ட் நகரில் பெண்கள் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் வரைந்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து துரைமுருகன் வீட்டில் கோலம்

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாசல் முன்பு கோலம் வரையப்பட்டது. அந்த கோலத்தில் வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சியினரும் மாணவர்களும் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை பெசன்ட் நகரில் பெண்கள் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் வரைந்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து துரைமுருகன் வீட்டில் கோலம்

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாசல் முன்பு கோலம் வரையப்பட்டது. அந்த கோலத்தில் வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

Intro:வேலூர் மாவட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து துரைமுருகன் வீட்டிலும் கோலம் வரையப்பட்டது
Body:மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது மேலும் இது தொடர்பாக மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பிலும் பல்வேறு மாணவர்கள் அமைப்பு சார்பிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன இந்த சூழ்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் பெண்கள் சிலர் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வகையில் கோலம் வரைந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வீடுகளில் கோலம் வரைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டிலும் கோலம் வரையப்பட்டது இந்தநிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாசல் முன்பு கோலம் வரையப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது அதாவது அந்த கோலத்தில் வேண்டாம் சிஏஏ, என்.ஆர்.சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதேசமயம் வீட்டில் துரைமுருகன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.