ETV Bharat / state

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சா வழக்கில் கைது!

author img

By

Published : Feb 11, 2020, 11:28 AM IST

Updated : Feb 11, 2020, 11:51 AM IST

வேலூர்: 12 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்திருந்த தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Drug usage by college students
Drug usage by college students

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி அருகே கே.ஆர்.எஸ். நகரிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்பாடி DSP துரைபாண்டியன் மற்றும் விருதம்பட்டு காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

சோதனையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் பதுக்கிவைக்ப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவ்வீட்டில் இருந்த எட்டு பேரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பிடிப்பட எட்டு பேரும் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இச்சசம்பவம் தொடர்பாக தலைமறைவாகவுள்ள மேலும் நான்கு மாணவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கஞ்சா பதுக்கிய பிரபல பல்கலைக்கழகத்தில் பயிலும் எட்டு மாணவர்கள் கைது

குறிப்பிட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே படித்துவருகின்றனர். அப்படி இருக்கையில், மாணவர்களுக்கு 12 கிலோ கஞ்சா கிடைத்தது எப்படி அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி அருகே கே.ஆர்.எஸ். நகரிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்பாடி DSP துரைபாண்டியன் மற்றும் விருதம்பட்டு காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

சோதனையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் பதுக்கிவைக்ப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவ்வீட்டில் இருந்த எட்டு பேரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பிடிப்பட எட்டு பேரும் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இச்சசம்பவம் தொடர்பாக தலைமறைவாகவுள்ள மேலும் நான்கு மாணவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கஞ்சா பதுக்கிய பிரபல பல்கலைக்கழகத்தில் பயிலும் எட்டு மாணவர்கள் கைது

குறிப்பிட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே படித்துவருகின்றனர். அப்படி இருக்கையில், மாணவர்களுக்கு 12 கிலோ கஞ்சா கிடைத்தது எப்படி அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் விஐடி பல்கலைக் கழக மாணவர்கள் 8 பேர் கஞ்சா வழக்கில் கைது - 12 கிலோ கஞ்சா பறிமுதல் பரபரப்பு தகவல்கள்Body:வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி அருகே கே.ஆர்.எஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திர்க்கு சென்ற காட்பாடி DSP துரைபாண்டியன் மற்றும் விருதம்பட்டு காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து. பதுக்கிவைக்ப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் அவ்வீட்டில் இருந்த 8-பேரை பிடித்து வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். முதற்க்கட்ட விசாரணையில் பிடிப்பட 8-பேர் காட்பாடியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமான விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என தெரியவந்துள்து.
இதையடுத்து ழவி.ஐ.டி பல்கலைகழக மாணவர்களான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த சத்யா(20), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோனீஷ்(20), சேக்சிந்திக்(19), மிட்டா திருமலா பாஸ்கர் ரெட்டி(21), சோபிலா நாகசிவா(20), தமோரா தினேஷ்(20), பண்டி புஸ்யமித்ரா சாய்பாலாஜி(19), ரவ்ரீ பூரண்ண சந்ராசாய்(20), மூர்பவாணிராகவ்(19), தமா சாரக் யஸ்வந்த் பாபு(20), செக்குறி ஹர்வா(21), மற்றும் தெலுங்கானவை சேர்ந்த மாரி நிக்கல் ரெட்டி(21) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்புக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 4 மாணவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். விஐடி பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களே படித்து வருகின்றனர் அப்படி இருக்கையில் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 12 கிலோ கஞ்சா கிடைத்தது எப்படி அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்கள் யார் என்பது குறித்தும் மேலும் இந்த கஞ்சாவை மாணவர்கள் எந்தெந்த வகையில் சப்ளை செய்கின்றனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் Conclusion:
Last Updated : Feb 11, 2020, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.